அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஏராளமான தெருவோர கடைகள் உள்ளன. இந்த கடைகளை அகற்ற தொழிற்பேட்டை சிட்கோ சார்பில் இன்று நோட்டீசு வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையோர கடை வியாபாரிகள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் இன்று காலை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள சிட்கோ அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் திடீரென அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் ஸ்தம்பித்து நின்றன. தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்





