இடி மின்னலுடன் வெளுத்து வாங்கும் மழை.. தமிழ்நாடு வெதர்மேன் “பிரதீப் ஜான்” என்ன சொல்லியிருக்கார் …

சென்னையில் இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் மழை நிலவரம் குறித்த முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தென் மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதுமே தீவிரத்துடன் உள்ளதாக இந்திய மாநில மையம் அறிவித்தது. இதற்கு சாதகமாக வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியும் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு நல்ல மழை பொழிவை கொடுத்தது.

இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று அதிகாலை ஆந்திரா அருகே கரையை கடந்தது. காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்திற்கு நல்ல மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆந்திரா பக்கம் நகர்ந்ததால் தமிழகத்திற்கான மழை வாய்ப்பு குறைந்தது. இருப்பினும் வடகிழக்கு பருவமழை மற்றும் மேற்கு திசை காற்றின் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே இடி மின்னலுடன் மழை இருக்கும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று அதிகாலை முதலே பயங்கர இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கி வருகிறது. மழை குறித்து முன்னறிவிப்புகளை வெளியிடும் தனியார் வானிலை ஆர்வலரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் மழை நிலவரம் குறித்து தனது சமூக வலைதளத்தில் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அதன்படி KTCC எனப்படும் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு பெல்ட் மற்றும் வேலூர், ராணிப்பேட்டை மற்றும் வட தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்வதாக தெரிவித்துள்ளார். இன்று இரவு முதல் நாளை காலை வரை மீண்டும் வட உள் தமிழகம் உட்பட வட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்.

காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு பகுதிகளிலும் சில இடங்களில் டமால் டுமீல் கிடைக்கும் என இடி மின்னலை குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு வெதர்மேன், இந்த மழை சாமானியர்களின் இன்ப மழை எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

இடி மின்னலுடன் வெளுத்து வாங்கும் மழை.. தமிழ்நாடு வெதர்மேன் “பிரதீப் ஜான்” என்ன சொல்லியிருக்கார் …

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.