கட்டடம் விழுந்து 6 பேர் பலி
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தொடர் கனமழை பெய்துவரும் நிலையில், 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழப்பு
மன்குர்த் பகுதியில் ஏற்பட்ட இந்த விபத்தில் ஒருவர் காயங்களுடன் மீட்பு. மூன்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இடிந்து விழுந்ததாக சொல்லப்படும் நிலையில், சிலர் சிக்கியிருக்கலாம் என தகவல்மகாராஷ்டிர மாநிலம், மும்பையின் மன்குர்த் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த கன மழையின்போது, மூன்று மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. இந்த சம்பத்தில் 6 பேர் பலியாகினர். மேலும் ஒருவர் காயமடைந்தார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹனுமன் கோயிலுக்குப் பின்னால் உள்ள ஜனதா நகரில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக அவர்கள் கூறினர்






