சென்னை:
DAYA(A) டாக்டர் அம்பேத்கர் இளைஞர் அரசியல் அமைப்பு நிறுவன தலைவர் இரா.மு.அருண்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய கபடி அணியின் முன்னணி வீராங்கணை சென்னை கண்ணகிநகர் கார்த்திகா. தேசிய அளவில் விளையாடி ரசிகர்களின் நெஞ்சில் குடியிருக்கும் கண்ணகிநகர் கார்த்திகா தனது திறமையினை சிறப்பாக வெளிபடுத்திக் காட்டி பல புள்ளிகளை பெற்று அசத்தியவர் என்பதை யாவரும் அறிந்த ஒன்று. ஆனால் இந்திய அணியில் சேர்ப்பதற்கு இந்த திறமையான வீராங்கணைக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது எதனால் என்று கேள்வி எழுகிறது. அவருக்கு திறமையில்லையா? அல்லது சாதி தடையாக உள்ளதா?
தமிழகத்தின் கபடி வீரங்கணைகளை ஏன் இந்திய அணியில் தேர்வு செய்யவில்லை. இந்தியாவற்கு பெருமை சேர்க்கக் கூடியவர் அவருக்கு ஏன் வாய்ப்பு தரவில்லை என்பது யாவருக்கும் மிகப் பெரிய வருத்தமாக உள்ளது. அவரது திறமையால் வறுமையை உடைத்து சற்று முன்னேறி வரும் நிலையில் அவரை நீக்கியது வேதனையே. தடையா? சருக்கலா? சாதிதான் காரணமா? சாதிதான் சமூகம் என்றால் வீசும் காறறில் விஷம் பரவட்டும்.
இந்த விஷத்தால் விளையாட்டுத்துறை அழியட்டும். எதற்கு விளையாட்டு துறை. அதிலும் கபடி அணி எதற்கு. கலைத்து
விடுங்கள். விளையாட்டுத் துறையில் சாதி பார்க்கும் இந்திய அணியா? முழமையான காரணம் என்ன வென்று விளக்க வேண்டும். இந்த விஷயம் தமிழகத்தின் விளையாட்டுதுறை அமைச்சர் ஆதவ் அர்ஜூன் கவனத்திற்கு தெரியவில்லையா? தெரிந்தும் தெரியாதைப்போல் இருக்கின்றாரா? கார்த்திகா மட்டும் அல்ல ஒட்டுமொத்த கபடி வீரங்கனைகள் யாவரும் புறக்கணிக்கபட்டுள்ளனர் என்பதாவது அமைச்சருக்கு தெரியுமா?
இதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து நசுக்கப்படும் திறமைவாய்ந்த தமிழக விளையாட்டு வீரர்களின் நிலையை மாற்ற தமிழக முதல்வர் விஜய்யும், விளையாட்டுத்துறை அமைச்சர ஆதவ் அர்ஜுன் அவர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற எங்கள் வேண்டுகோளை முன்வைக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

உதவித்தொகையை உயர்த்தி வழங்க கோரி சைதாப்பேட்டையில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சென்னை:மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை உடனே உயர்த்தி வழங்க வேண்டும். உதவித் தொகை கேட்டு விண்ணப்பித்து






