கிருஷ்ணகிரி அருகே ஏரியில் முகாமிட்ட காட்டு யானைகள் – காட்டுக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை

கிருஷ்ணகிரி நகரை ஒட்டியுள்ள தேவசமுத்திரம் எனும் ஏரியில் 2 காட்டு யானைகள் முகாமிட்ட நிலையில், அவற்றைக் காண பொதுமக்கள் திரளாக கூடினர்.

தருமபுரி மாவட்டம் மாரண்ட அள்ளி மற்றும் பஞ்சப்பள்ளி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 காட்டு யானைகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, கிருஷ்ணகிரி மாவட்டம் பையூர் பகுதியில் கிருஷ்ணகிரி – தருமபுரி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி சுற்றித் திரிந்தது கொண்டிருந்தது. இந்த காட்டு யானைகளை, வனத்துறையினர் பாதுகாப்பாக, தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் சஞ்சீவிராயன் மலைக்கு விரட்டினர்.

அங்கு முகாமிட்டிருந்த யானைகள் தாக்கியதில் மொரசுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் உயிரிழந்தார். தொடர்ந்து வனத்துறையினர் 2 யானைகளையும் கண்காணித்து வந்த நிலையில், இன்று அதிகாலை 5 மணியளவில், கிருஷ்ணகிரி நகரை ஒட்டியுள்ள தேவசமுத்திரம் ஏரியில் அவை முகாமிட்டன. இந்த யானைகள் ஏரியில் உள்ள தண்ணீரில் ஆனந்த குளியலிட்டு விளையாடின.

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

கிருஷ்ணகிரி அருகே ஏரியில் முகாமிட்ட காட்டு யானைகள் – காட்டுக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச