கேன் வில்லியம்சனுக்கு அறுவை சிகிச்சை: உலகக் கோப்பையில் விளையாடுவாரா?

வெலிங்டன்:
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் பீல்டிங்கின் போது முழங்காலில் காயம் அடைந்த நியூஸிலாந்து அணியின் நட்சத்திர வீரரான கேன் வில்லியம்சனுக்கு அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாகவும், இதனால் அவர், இந்தியாவில் நடைபெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கலந்து கொள்வது சந்தேகம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் கடந்த மார்ச் 31ம் தேதி அகமதாபாத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தின் போது குஜராத் டைட்டன்ஸ் வீரரான நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன் எல்லைக்கோட்டுக்கு அருகே துள்ளியவாறு கேட்ச் செய்ய முயன்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் இருந்து வில்லியம்சன் விலகுவதாக அறிவித்தார்.
இந்நிலையில், வில்லியம்சனுக்கு ஏற்பட்டுள்ள காயத்துக்கு நேற்று ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்படது. இதில் அவருக்கு அடுத்த 3 வாரங்களில் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற உள்ள ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக வில்லியம்சன் முழு உடற்தகுதியை எட்டுவது சாத்தியம் இல்லை என்று கூறப்படுகிறது. அவர், உடற்தகுதியை பெறாதபட்சத்தில் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பதை தவறவிடக்கூடும்.

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள்

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு

கேன் வில்லியம்சனுக்கு அறுவை சிகிச்சை: உலகக் கோப்பையில் விளையாடுவாரா?

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள்

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு