சட்டசபையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு: எடப்பாடி பழனிசாமி பேச்சு புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு

சென்னை:
சட்டசபை பேரவையில் இருந்து இன்று அதிமுக எம்எல்ஏக்கள் திடீரென வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுவதை மட்டும் நேரடி ஒளிபரப்பு வெய்வதில்லை என்று அவர்கள் குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளனர்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான மானியக் கோரிக்கைகளும், விவாதங்களும் நடைபெற்று வருகின்றன. தற்போது நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மானியக் கோரிக்கை தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது.
இதில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகராட்சி 30வது வார்டு திமுக கவுன்சிலர் பக்கிரிசாமி மீதான பாலியல் தொந்தரவு வழக்கு குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம்’ கொண்டு வந்து பேசினார்.
இந்த நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபையில் இருந்து திடீரென வெளிநடப்பு செய்தனர். அவர்கள் அளித்த தகவலில், சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பேசுவதை மட்டும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. சட்டசபையில் ஜீரோ ஹவர் கேள்வி நேரத்தின்போது சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி அவையில் பேசுவதை மட்டும் புறக்கணிக்கிறார்கள். இது தொடர்ச்சியாக திட்டமிட்டு நடக்கிறது. யாருடைய அறிவுறுத்தலின் பேரிலோ இது நடப்பதாக கூறியும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வெளிநடப்பு செய்துள்ளதாக தெரிவித்தனர்.

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள்

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு

சட்டசபையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு: எடப்பாடி பழனிசாமி பேச்சு புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள்

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு