பழங்களில் சீத்தாப்பழம் என்பது பலவிதமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஒரு சத்தான பழமாகும்.
இதில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. இது பல மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. தற்போது சீத்தாப்பழத்தினை சாப்பிடுவதனால் கிடைக்கும் பத்து நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
1. இதய நோய் வராமல் தடுக்கும்.
2. நினைவாற்றலை அதிகரிக்கும்.
3. ஆரம்ப நிலை காசநோயை உடலில் இருந்து நீக்கும். மற்ற வகை காசநோயை கட்டுப்படுத்தும் ஆற்றல்
உடையது.
4. உடல் எடையைக் குறைக்க உதவும்.
5. கோடைகாலத்தில் ஏற்படக் கூடிய நாவறட்சியை போக்கும். உடலுக்கு குளிர்ச்சியை தரும்.
6. உடல் உள் உறுப்புக்களில் ஏற்படும் புண்களை ஆற்றும் தன்மை இந்த சீதா பழத்தில் உள்ளது.
7. ஊற வைத்த வெந்தயத்துடன் சீத்தாப்பழத்தை சாப்பிட்டு வந்தால் குடல் புண்கள் குணமாகும்.
8. உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரித்து ரத்தசோகை நோய் ஏற்படாமல் அறவே தடுக்கும்.
9. உடல் சோர்வைப் போக்கி உடலுக்கு புத்துணர்வை கொடுக்கும்.
10.உடல் வலிமை பெற சீத்தாப்பழத்தை திராட்சை பழச்சாற்றுடன் கலந்து ஜூஸாக பருகலாம்.






