சென்னை:
சென்னை அண்ணாசாலையில் எல்.ஐ.சி. தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பாலிசி எடுத்த அனைவரது டாக்குமெண்ட்களும் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் எல்ஐசியின் மாடியில் வைக்கப்பட்டுள்ள பெயர்பலகையில் இன்று திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் கூடுவததை தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தாம்பரம் மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா
தாம்பரம் மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் வட்டம் திருநீர்மலை கிராமம்






