செய்திகளின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தும் ‘தகவல் சரிபார்ப்பாளர்களாக’ ஊடகவியலாளர்கள் மாற வேண்டும்

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில், ஊடகவியலாளர்களுக்கான சிறப்பு ஒரு நாள் பயிலரங்கு இன்று ஆம் தேதி விழுப்புரத்தில் நடைபெற்றது. இந்த பயிலரங்கில் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பரையாற்றிய மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தென்மண்டல தலைமை இயக்குநர் (பொறுப்பு) வை. பழனிச்சாமி, தகவல் தொழில்நுட்பப் புரட்சி ஏற்படுத்தியுள்ள சவால்கள் குறித்து விரிவாகப் பேசினார். தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் செய்திகள் மிகவேகமாகப் பரவினாலும், அவற்றில் உண்மைத்தன்மை என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது என்றும், குறிப்பாக செயற்கை நுண்ணறிவு மற்றும் டீப்ஃபேக் தொழில்நுட்பங்கள் மூலம் பரப்பப்படும் போலிச் செய்திகள் சமூக அமைதிக்கு அச்சுறுத்தலாக விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். எனவே ஊடகவியலாளர்கள் வெறும் செய்திகளைத் தருபவர்களாக மட்டும் இல்லாமல், ஒவ்வொரு செய்தியையும் நுட்பமாக ஆராய்ந்து அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தும் தகவல் சரிபார்ப்பாளர்களாகச் செயல்பட வேண்டும் என்றும், அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி சார்ந்த செய்திகள் கடைக்கோடி மனிதரையும் சென்றடைவதை உறுதி செய்யும் தார்மீகப் பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு என்றும் அவர் வலியுறுத்தினார்.

வெப்ப அலைகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான மேம்பட்ட நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்: தேசிய மனித உரிமைகள் ஆணையம்

நாட்டில் வெப்ப அலைகளால் பாதிக்கப்படக்கூடிய மக்களை பாதுகாப்பதற்கு தேவையான மேம்பட்ட நடவடிக்கைகள் மற்றும்

தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்

*🔹🔸தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்**📍. அரசியல் நோக்கங்களுக்காக

செய்திகளின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தும் ‘தகவல் சரிபார்ப்பாளர்களாக’ ஊடகவியலாளர்கள் மாற வேண்டும்

வெப்ப அலைகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான மேம்பட்ட நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்: தேசிய மனித உரிமைகள் ஆணையம்

நாட்டில் வெப்ப அலைகளால் பாதிக்கப்படக்கூடிய மக்களை பாதுகாப்பதற்கு தேவையான மேம்பட்ட நடவடிக்கைகள் மற்றும்

தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்

*🔹🔸தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்**📍. அரசியல் நோக்கங்களுக்காக