சென்னை:
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்தது.
தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த 3 நாட்களாக ஏற்றத்துடேன காணப்பட்டு வருகிறது. ஆனால் இன்று அதிர்ச்சி அளிக்கும் வகையில் தங்கத்தின் விலை உச்சம் கண்டுள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.44,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.5,590க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 1.30 காசுகள் அதிகரித்து ரூ.77.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து உச்சத்தை தொட்டதால் தங்கம் நகை வாங்கும் ஆர்வம் கொண்டவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






