தமிழ் அறிஞர்கள் விருது: தமிழக அரசு அழைப்பு…

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழுக்கும், தமிழ்மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்கு தொண்டாற்றுவோருக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளையும் சிறப்புகளையும் அளித்து வருகிறது. அந்தவகையில் 2024-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருதுக்கும், 2023-ம் ஆண்டுக்கான 74 விருதுகளுக்கும் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி, திருவள்ளுவர் நாள் விருதுகள் அடிப்படையில் திருவள்ளுவர் விருது, பாரதியார் விருது, பாரதிதாசன் விருது, திரு.வி.க. விருது, கி.ஆ.பெ.விசுவநாதம் விருது, காமராஜர் விருது, அண்ணா விருது பெறுவோருக்கு (தலா ஒருவருக்கு) ரூ.2 லட்சம், ஒரு பவுன் தங்க பதக்கம், தகுதியுரை, பொன்னாடை வழங்கப்படுகின்றன. இலக்கிய மாமணி (3 பேருக்கு) விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சத்துடன் ஒரு பவுன் தங்க பதக்கம், தகுதியுரை, பொன்னாடை வழங்கப்படுகின்றன. தமிழ் வளர்ச்சி துறை விருதுகள் அடிப்படையில் தமிழ்த்தாய் விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சத்துடன் கேடயமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. கபிலர் விருது, உ.வே.சா. விருது, கம்பன் விருது, சொல்லின் செல்வர் விருது, உமறு புலவர் விருது, ஜி.யு.போப் விருது, இளங்கோவடிகள் விருது, அம்மா இலக்கிய விருது, மொழி பெயர்ப்பாளர் விருது (10), சிந்தனை சிற்பி சிங்காரவேலர் விருது, அயோத்திதாச பண்டிதர் விருது, மறைமலையடிகளார் விருது, வள்ளலார் விருது, காரைக்கால் அம்மையார் விருது பெறுவோருக்கு (தலா ஒரு நபருக்கு) ரூ.2 லட்சத்துடன், தங்க பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை வழங்கப்படுகிறது. தமிழ் வளர்ச்சி துறை விருதுகள் அடிப்படையில் தமிழ்த்தாய் விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சத்துடன் கேடயமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. கபிலர் விருது, உ.வே.சா. விருது, கம்பன் விருது, சொல்லின் செல்வர் விருது, உமறு புலவர் விருது, ஜி.யு.போப் விருது, இளங்கோவடிகள் விருது, அம்மா இலக்கிய விருது, மொழி பெயர்ப்பாளர் விருது (10), சிந்தனை சிற்பி சிங்காரவேலர் விருது, அயோத்திதாச பண்டிதர் விருது, மறைமலையடிகளார் விருது, வள்ளலார் விருது, காரைக்கால் அம்மையார் விருது பெறுவோருக்கு (தலா ஒரு நபருக்கு) ரூ.2 லட்சத்துடன், தங்க பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை வழங்கப்படுகிறது. தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் விருது 3 பேருக்கு வழங்கப்படுகிறது. அவர்களுக்கு தலா ரூ.2 லட்சத்துடன் கேடயம், தகுதியுரை, பொன்னாடை வழங்கப்படுகிறது. 38 பேருக்கு (மாவட்டந்தோறும் ஒருவருக்கு) தமிழ் செம்மல் விருது வழங்கப்படுகிறது. அவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் மற்றும் தகுதியுரை வழங்கப்படுகின்றன. அந்தவகையில் 75 பேருக்கு விருது அளிக்கப்பட இருக்கிறது. எனவே தகுதிவாய்ந்த தமிழ் அறிஞர்கள் http://awards.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவோ அல்லது ‘தமிழ் வளர்ச்சி இயக்குனர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை – 600 008’ என்ற முகவரிக்கு தபால் மூலமாக அக்டோபர் 15-ந்தேதிக்குள் உரிய ஆவணங்களோடு விண்ணப்பம் அனுப்ப வேண்டும். மேற்கண்ட இணையதளத்திலேயே இந்த விருது பற்றிய விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. கூடுதல் விவரங்களுக்கு 044- 28190412, 28190413 ஆகிய தொலைபேசி எண்களை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி அக்டோபர் 15 என தமிழக அரசு தனது செய்தி கூறிப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

தமிழ் அறிஞர்கள் விருது: தமிழக அரசு அழைப்பு…

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.