தருமபுரி அருகே பண்ணையில் மின்னல் தாக்கி 5,000 கோழிகள் தீயில் கருகி இறப்பு

தருமபுரி:
தமிழகத்தின் பல பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. சில இடங்களில் மின்னலும் தாக்குகிறது. அதன்படி தருமபுரி அருகே திருப்பதி என்பவருக்கு சொந்தமான 360 அடி நீளமும் 22 அடி அகலமும் கொண்ட கோழிப்பண்ணையில் 5,000 கோழிகளை வளர்த்து வந்துள்ளார். இன்று அதிகாலையில் பண்ணையின் மேல் இடி தாக்கியதால் பண்ணை முழுவதும் தீ பிடித்து எரிந்தது.
இதை கண்ட திருப்பதியின் சகோதரர் பதறியடித்து ஒட்டி சென்று தனது தம்பி திருப்தியிடம் பண்ணை தீ பிடித்தது பற்றி தெரிவித்துள்ளார். திருப்பதி, அவரது மனைவி மற்றும் சகோதரர் ஆகியோர் தீயை அணைக்க முயற்சித்தனர்.
திருப்பதியின் அண்ணன் மகன் பிரபு என்பவர் அரூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பாகவே பண்ணையில் இருந்த 5,000 கோழிகள் தீயில் எரிந்து நாசமாகின.
பண்ணையில் ஏற்பட்ட தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத் துறையினர் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

எனது அன்பு சகோதரரும் எனது ஆசிரியருமான அண்ணன் திரு இருதயராஜ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை நிருபர்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்

மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் மற்றும் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அண்மைத் தகவல்கள்

மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவும் சூழலில் முக்கியத் துறைகள் முழுவதும் தயார்நிலையையும், தடையற்ற செயல்பாட்டையும் உறுதி செய்வதற்காக மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. மேற்கு ஆசியாவில் உருவாகியுள்ள சூழ்நிலையின் பின்னணியில், எரிசக்தி விநியோகம், கடல்சார் நடவடிக்கைகள், அப்பகுதியில் உள்ள இந்திய

தருமபுரி அருகே பண்ணையில் மின்னல் தாக்கி 5,000 கோழிகள் தீயில் கருகி இறப்பு

எனது அன்பு சகோதரரும் எனது ஆசிரியருமான அண்ணன் திரு இருதயராஜ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை நிருபர்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்

மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் மற்றும் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அண்மைத் தகவல்கள்

மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவும் சூழலில் முக்கியத் துறைகள் முழுவதும் தயார்நிலையையும், தடையற்ற செயல்பாட்டையும் உறுதி செய்வதற்காக மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. மேற்கு ஆசியாவில் உருவாகியுள்ள சூழ்நிலையின் பின்னணியில், எரிசக்தி விநியோகம், கடல்சார் நடவடிக்கைகள், அப்பகுதியில் உள்ள இந்திய