அண்மை செய்தி

தாம்பரம் தலைமை அரசு மருத்துவமனையில் மருந்து&மாத்திரை வழங்குவதில் காலதாதம்; கூடுதல் கவுன்டர்கள் திறக்கப்படுமா?

சென்னை:

DAYA(A)) டாக்டர் அம்பேத்கர் இளைஞர் அரசியல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை (குரோம்பேட்டை) தாம்பரம் மாவட்ட தலைமை அரசு பொது மருத்துனையில் தினமும் சுமார் 800க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து செல்கின்றனர். இவர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள நோய் பாதிப்புகளுக்கு ஏற்ப மருத்துவரை பார்க்கின்றனர். அதற்கே பல மணி நேரம் பாத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அப்பாடியா ஒரு வழியாக மருத்துவரை பார்த்துவிட்டோம் என்று நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள், மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்து மாத்திரைகளை வாங்க சென்றால் அங்கிருக்கும் நீண்ட நெடிய வரிசையை பார்த்ததும் நோயாளிகளுக்கு உடனடியாக தலை சுற்றிவிடுகிறது.
மாத்திரை வழங்க 4 கவுன்டர்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் 50க்கும் மேற்பட்டோர் நிற்கின்றனர். இதனால் காலையில் வரிசையில் நிற்க ஆரம்பித்தால் மதியம் வரை ஆகிவிடுகிறது. நோயாளிகளுக்கு மேலும் நோய் பாதிப்பை இது அதிகமாக்குவதாக உள்ளது. மிகவும் சோர்வடையும் நோயாளிகள் அவர்களுக்கு முன்னே இருப்பவர்களிடம் கூறிவிட்டு அருகே சற்று ஓய்வெடுத்துவிட்டு வந்தால் அவர்கள் மறுபடியும் நீண்ட வரிசையில் காத்திருந்தே வர வேண்டிய அவல நிலை உள்ளது. அவ்வாறு இருந்தும் பயண் கிடையாது. நேரம் முடிந்ததும் மாத்திரை கிடையாது. நாளை வாருங்கள் என்று கூறி அனுப்பி விடுகின்றனர்.
இதுபோன்ற அவல நிலையை போக்க தமிழக அரசு முன்வர வேண்டும். நோயாளிகளின் அவல நிலையை கருத்தில் கொண்டு நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்பட காலவிரயத்தை தடுக்க கூடுதலாக எத்தனை மாத்திரை கவுன்டர்களை திறக்க முடியுமோ அவற்றை திறந்து நோயாளிகளின் சிரமத்தை போக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.

உதவித்தொகையை உயர்த்தி வழங்க கோரி சைதாப்பேட்டையில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சென்னை:மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை உடனே உயர்த்தி வழங்க வேண்டும். உதவித் தொகை கேட்டு விண்ணப்பித்து

தாம்பரம் தலைமை அரசு மருத்துவமனையில் மருந்து&மாத்திரை வழங்குவதில் காலதாதம்; கூடுதல் கவுன்டர்கள் திறக்கப்படுமா?

சென்னை: DAYA(A)) டாக்டர் அம்பேத்கர் இளைஞர் அரசியல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை

கபடி வீராங்கணை கண்ணகிநகர் கர்த்திகாவிற்கு இந்திய அணியில் இடம் மறுத்தது ஏன?: தயா அமைப்பு கேள்வி

சென்னை:DAYA(A) டாக்டர் அம்பேத்கர் இளைஞர் அரசியல் அமைப்பு நிறுவன தலைவர் இரா.மு.அருண்குமார் வெளியிட்டுள்ள

ஊழல் பெருச்சாளிகளின் கூடாரமாக மாறுகிறதா தவெக?: சா.ரஜினிகாந்த்

சென்னை:விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் சா.ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-ஜென்சி

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட்டால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும்: – தங்கம் தென்னரசு

சென்னை:பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் கைவிடப்படும் என்று முதல்வர்

தாம்பரம் தலைமை அரசு மருத்துவமனையில் மருந்து&மாத்திரை வழங்குவதில் காலதாதம்; கூடுதல் கவுன்டர்கள் திறக்கப்படுமா?

உதவித்தொகையை உயர்த்தி வழங்க கோரி சைதாப்பேட்டையில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சென்னை:மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை உடனே உயர்த்தி வழங்க வேண்டும். உதவித் தொகை கேட்டு விண்ணப்பித்து

தாம்பரம் தலைமை அரசு மருத்துவமனையில் மருந்து&மாத்திரை வழங்குவதில் காலதாதம்; கூடுதல் கவுன்டர்கள் திறக்கப்படுமா?

சென்னை: DAYA(A)) டாக்டர் அம்பேத்கர் இளைஞர் அரசியல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை

கபடி வீராங்கணை கண்ணகிநகர் கர்த்திகாவிற்கு இந்திய அணியில் இடம் மறுத்தது ஏன?: தயா அமைப்பு கேள்வி

சென்னை:DAYA(A) டாக்டர் அம்பேத்கர் இளைஞர் அரசியல் அமைப்பு நிறுவன தலைவர் இரா.மு.அருண்குமார் வெளியிட்டுள்ள

ஊழல் பெருச்சாளிகளின் கூடாரமாக மாறுகிறதா தவெக?: சா.ரஜினிகாந்த்

சென்னை:விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் சா.ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-ஜென்சி

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட்டால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும்: – தங்கம் தென்னரசு

சென்னை:பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் கைவிடப்படும் என்று முதல்வர்