தாம்பரம் தொகுதியில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் எம்.ராஜா அவர்களுக்கு மக்கள் அமோக வரவேற்பினை அளித்தனர்
தமிழகத்தில் வரும் 23 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் பல்வேறு கட்சிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் தாம்பரம் சட்டமன்றம் தொகுதியில் போட்டியிடும் எம். ராஜா அவர்கள் யானை சின்னத்தில் போட்டியிடுகிறார். தாம்பரம் தொகுதியில் போட்டியிடும் ராஜா அவர்கள் பல்வேறு பகுதிகளில் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் போகும் இடம் எல்லாம் மக்கள் யானை சின்னத்திற்கு வாக்களிப்பதாகவும் அவர்களின் குறைகளை கேட்டறிந்து சட்டமன்ற உறுப்பினராக நான் தேர்வு செய்யப்பட்டால் உங்களின் கோரிக்கைகளை நான் நிறைவேற்றி தருவதாகவும் அவர் கூறினார். அவருக்கு மக்கள் அமோக வரவேற்பினை அளித்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராஜா பகுஜன் சமாஜ் கட்சியின் தாம்பரம் தொகுதி வேட்பாளராக என்னை நிறுத்திய தேசியத் தலைவர் அம்மையார் மாயாவதி அவர்களுக்கும் மாநிலத் தலைவர் ஆனந்தன் அவர்களுக்கும் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் நீலகண்டன் அவர்களுக்கும் எங்களின் வழிகாட்டி அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கும் என் முதற்கண் நன்றியினை தெரிவித்துக் கொண்டார். தாம்பரம் தொகுதியில் நீண்ட நாட்களாக பல்வேறு பிரச்சனைகள் உள்ளது என்றும் தண்ணீர் பிரச்சனை வீடு பட்டா பிரச்சனை பாதாள சாக்கடை மழை வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு அடைகின்றனர் போன்ற பிரச்சனைகளை மக்கள் என்னிடம் கோரிக்கையாக கூறி அதனையும் சரி செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். நான் தாம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் உங்கள் வீட்டுப் பிள்ளையாக எந்நேரமும் என்னை அழைத்து உங்கள் தேவைகளை நீங்கள் செய்து கொள்ளலாம் அது மட்டும் இல்லாமல் தாம்பரம் தொகுதியில் மக்கள் வைக்கும் கோரிக்கைகளை சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத்தில் எடுத்துச் சென்று நமது தேவைகளை உடனடியாக செய்து முடிப்பேன். மேலும் நமது கட்சி தேசிய கட்சி என்பதால் என்னால் விரைவில் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும் என்று கூறினார். மேலும் பள்ளிக்கூடங்கள் தரம் உயர்த்துதல் தாம்பரம் தொகுதியில் முதியோர் காப்பகம் கட்டித் தருதல், விளையாட்டு மைதானங்கள், நவீன உடற்பயிற்சி கூடங்கள் போன்றவைகளை நான் செய்து கொடுப்பேன் என்று கூறினார்.






