சென்னை: ஒன்றிய பா.ஜ.கா அரசின் விஸ்வகர்மா திட்டத்தை எதிர்ப்பு தெரிவித்து செப். 6ம் தேதி தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார். பா.ஜ.கா தலைமையிலான ஒன்றிய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, அண்மையில் ‘விஸ்வகர்மா யோஜனா’ என்ற ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது.






