அண்மை செய்தி
பிரதமரின் சூரியசக்தி வீடு மின்சாரத் திட்டத்தின் கீழ் 48 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பயனடைந்துள்ளன அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான பாலமாக ஊடகங்கள் செயல்படுகின்றன: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு எம் சிவகுரு பிரபாகரன் நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் டெல்லி விரைவு நீதிமன்றத்தின் முதல் விசாரணைக்கே அரசுத் தரப்பில் யாரும் ஆஜராகாததால் நீதிபதி அதிருப்தி திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் சென்னை சேத்துப்பட்டில் செயல்பட்டு வரும் எம்.சி.சி. பப்ளிக் பள்ளி தனது 10ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு ஒரே நிகழ்வில் 56 உலகச் சாதனைகளை நிகழ்த்தி புதிய வரலாறு படைத்துள்ளது திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

தீபாவளி முடிந்து சென்னை திரும்பும் மக்களுக்கு சிறப்பு ரயில்கள்! எம்.பி துரை வைகோ கோரிக்கை…!

தீபாவளி பண்டிகை:

நாடு முழுவதும் இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை வருகின்ற அக்டோபர் 31ம் தேதி மிக சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னை திருச்சி கோவை மதுரை தமிழகம் முழுவதும் உள்ள பெருநகரங்களில் கல்வி வேலைத் தொழில் நிமித்தமாக தங்கி இருக்கும் பொது மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.

சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் அறிவிப்பு:

இந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் பயணிகளின் வசதிக்காக தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக்கு கழகம் மற்றும் ரயில்வே சார்பில் ஆயிரக்கணக்கான சிறப்பு பேருந்துகளும், நூற்றுக்கணக்கான சிறப்பு ரயில்களும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும், வட மாநிலங்களுக்கும் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை கால ரயில்களுக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே முன்பதிவு துவங்கிய நிலையில் முன் பதிவு துவங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது தேவைக்கேற்ப சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சிறப்பு ரயில்களில் முன்பதிவு துவங்கியுள்ளது.

சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு திரும்பும் மக்கள்:

இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முடித்து சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு திரும்பும் மக்கள், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், நவம்பர் மூன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று திருச்சியில் இருந்து சென்னை எழும்பூர் வரை விருத்தாச்சலம் விழுப்புரம் வழியாக சிறப்பு இரயில் இயக்க வேண்டி திருச்சி கோட்ட இரயில்வே மேலாளருக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியதோடு, அலைபேசியிலும் தொடர்பு கொண்டு திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துறை வைகோ கோரிக்கை எடுத்துள்ளார்.

சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை:

அதுபோலவே புதுக்கோட்டையிலிருந்து சென்னை எழும்பூர் வரை விருத்தாச்சலம் விழுப்புரம் வழியாக சிறப்பு இரயில் இயக்க வேண்டி, மதுரை கோட்ட இரயில்வே மேலாளர் அவர்களுக்கும் கடிதம் அனுப்பியும், அலைபேசி வழியாகவும் கேட்டுக் கொண்டேன். பரிசீலனை செய்துவிட்டு திரும்ப அழைப்பதாக கூறினார்கள்.

மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னக இரயில்வே பொது மேலாளருக்கும் கடிதம் அனுப்பி உள்ளார் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரதமரின் சூரியசக்தி வீடு மின்சாரத் திட்டத்தின் கீழ் 48 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பயனடைந்துள்ளன

பிரதமரின் சூரியசக்தி வீடு மின்சாரத் திட்டத்தின் கீழ், உள்ளூர் மின்விநியோக நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட

அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான பாலமாக ஊடகங்கள் செயல்படுகின்றன: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு எம் சிவகுரு பிரபாகரன்

‘போதைப்பழக்கம் இல்லாத தமிழ்நாடு’ என்ற இலக்கை அடைய பொதுமக்களிடையே விழிப்புணர்வு அவசியம்: ராமநாதபுரம்

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் டெல்லி விரைவு நீதிமன்றத்தின் முதல் விசாரணைக்கே அரசுத் தரப்பில் யாரும் ஆஜராகாததால் நீதிபதி அதிருப்தி

📍 நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் டெல்லி விரைவு| நீதிமன்றத்தின் முதல் விசாரணைக்கே

சென்னை சேத்துப்பட்டில் செயல்பட்டு வரும் எம்.சி.சி. பப்ளிக் பள்ளி தனது 10ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு ஒரே நிகழ்வில் 56 உலகச் சாதனைகளை நிகழ்த்தி புதிய வரலாறு படைத்துள்ளது

131 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட எம்.சி.சி. அசோசியேஷனின் கீழ் இயங்கும் முன்னணி சிபிஎஸ்இ

தீபாவளி முடிந்து சென்னை திரும்பும் மக்களுக்கு சிறப்பு ரயில்கள்! எம்.பி துரை வைகோ கோரிக்கை…!

பிரதமரின் சூரியசக்தி வீடு மின்சாரத் திட்டத்தின் கீழ் 48 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பயனடைந்துள்ளன

பிரதமரின் சூரியசக்தி வீடு மின்சாரத் திட்டத்தின் கீழ், உள்ளூர் மின்விநியோக நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட

அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான பாலமாக ஊடகங்கள் செயல்படுகின்றன: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு எம் சிவகுரு பிரபாகரன்

‘போதைப்பழக்கம் இல்லாத தமிழ்நாடு’ என்ற இலக்கை அடைய பொதுமக்களிடையே விழிப்புணர்வு அவசியம்: ராமநாதபுரம்

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் டெல்லி விரைவு நீதிமன்றத்தின் முதல் விசாரணைக்கே அரசுத் தரப்பில் யாரும் ஆஜராகாததால் நீதிபதி அதிருப்தி

📍 நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் டெல்லி விரைவு| நீதிமன்றத்தின் முதல் விசாரணைக்கே

சென்னை சேத்துப்பட்டில் செயல்பட்டு வரும் எம்.சி.சி. பப்ளிக் பள்ளி தனது 10ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு ஒரே நிகழ்வில் 56 உலகச் சாதனைகளை நிகழ்த்தி புதிய வரலாறு படைத்துள்ளது

131 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட எம்.சி.சி. அசோசியேஷனின் கீழ் இயங்கும் முன்னணி சிபிஎஸ்இ