தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலையில் நடைபெற்ற சிறப்பு கூட்டுத் திருப்பலியைத் தொடர்ந்து, பனிமய மாதாவின் திருவுருவம் பொறித்த கொடி ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டுப் பேராலயக் கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. அப்போது அங்குத் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் “மரியே வாழ்க” என்ற முழக்கங்களுடன் பிரார்த்தனை செய்ததோடு, சமாதானத்தின் அடையாளமாகப் புறாக்களும் பலூன்களும் பறக்கவிடப்பட்டன. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறவுள்ள இத்திருவிழா நாட்களில் தினமும் பல்வேறு சிறப்புத் திருப்பலிகளும் நற்கருணை பவனியும் நடைபெறவுள்ள நிலையில், விழாவின் சிகர நிகழ்வான அன்னையின் சப்பர பவனி வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நகர வீதிகளில் பேரெழுச்சியுடன் நடைபெறவுள்ளது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 97:நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்றுபண்பின் தலைப்பிரியாச் சொல் விளக்கம்: பிறர்க்கு நன்மையான






