மதிப்பிற்குரிய தலாய்லாமா-வின் பிறந்த நாளையொட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அமைதி, நல்லிணக்கம் குறித்த அவரது போதனைகள் உலகம் முழுவதிலும் உள்ள மக்களுக்கு ஒரு வழிகாட்டும் சக்தியாகத் திகழ்கிறது என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
மதிப்பிற்குரிய தலாய்லாமாவிற்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். அமைதி, நல்லிணக்கம் குறித்த அவரது போதனைகள், உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு, வழிகாட்டும் சக்தியாகத் திகழ்கிறது. அவரது அறம் சார்ந்த ஆன்மீக வலிமையும், உலக நலனுக்கான அவரது அர்ப்பணிப்பும் பாராட்டுதலுக்குரியவை. அவர் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன்.






