மீண்டும் டெல்லி சென்ற விவசாய சங்க தலைவர் அய்யாகண்ணு…

விவசாயிகள் பிரச்சனை, காவிரி பிரச்சனை என தமிழக விவசாயிகளுடன் டில்லிக்கு சென்று கோமணத்துடன் போராட்டம் நடத்தி பின் மூன்று ஆண்டுகளாக காணாமல் போன விவசாய சங்க தலைவர் அன்னக்கண்ணு, தற்போது மீண்டும் போராட்டம் நடத்தியுள்ளனர். டெல்லியில் போராட்டம் நடத்த சக விவசாயிகளுடன் டெல்லி சென்றார்.

தலைநகர் டெல்லி சென்று  கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  போராட்டம் நடத்த உள்ளளாராம்.  அய்யாக்கண்ணுடன்  200 விவசாயிகளும் டெல்லி செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த டெல்லியில் கோமணத்துடன் போராட்டம் நடத்துவார்களா அல்லது,  வடமாநில விவசாயிகள் போல பேன்ட், குர்தா அணிந்து போராட்டம் நடத்துவார்களா என சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு உள்ளது.

தென்னிந்திய விவசாயிகள் சங்க தலைவராக இருந்து வருபவர் விவசாயி அய்யாக்கண்ணு. சொகுசு கார் உள்பட உச்சப்பட்ட வசதியுடைள அய்யாக்கண்ணு அவ்வப்போது விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில்  அவருக்கு ஆதரவாக விவசாயிகளை  டெல்லி அழைத்துச்சென்று போராடி வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு டெல்லியில் 100 நாள் போராட்டத்தை நடத்தினார். இந்த போராட்டத்தின்போது, விவசாயிகளை கோமணத்துடன் அமர வைத்ததுடன், மண்டைஓடு, பிச்சைப்பாத்திரம் ஏந்த வைத்து  என பல்வேறு வகையில்,   போராட்டம் நடத்தினார்  ஆனால், அவரது  போராட்டத்தை மத்தியஅரசும், வடமாநில விவசாய அமைப்புகளும் கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அய்யாக்கண்ணுவின் போராட்டத்தையும் காணவில்லை. அவரையும் காணவில்லை. கடந்த 3 ஆண்டுகளாக எந்தவித கோரிக்கைக்காகவும் போராடாத அய்யாக்கண்ணு,  தற்போது மீண்டும் டெல்லி சென்று போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்து உள்ளார். அவரது  தலைமையில் 200 விவசாயிகள் டெல்லி பயணம் செய்ய உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

இதையடுத்து நேற்று ( 21ந்தேதி),   திருச்சி ஜங்சன் ரெயில் நிலையத்தில் இருந்து நிஜாமுதீன் சம்பர் க்ராந்தி விரைவு ரெயிலில்  டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.  விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லி புறப்பட்டு சன்றனர்.

விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும், விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு மாத ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவுபடி காவிரியில் கர்நாடக அரசு மாதா மாதம் தண்ணீர் திறக்க வேண்டும். கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

மீண்டும் டெல்லி சென்ற விவசாய சங்க தலைவர் அய்யாகண்ணு…

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச