கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டாரம், ஜி.அரியூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட வட்டாரப் பொது சுகாதார அலகு கட்டிடத்தினை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைக மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் ஆகியோர் நேற்று திறந்து வைத்தார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவ எம்.எஸ்.பிரசாந்த், அவர்கள், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் க.கார்த்திகேயன் அவர்கள், சங்கராபுர சட்டமன்ற உறுப்பினர் தா.உதயசூரியன் அவர்கள், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தே.மலையரசன் அவர்கள், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் து.ரவிக்குமார் அவர்கள், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜெ.மணிக்கண்ணன் அவர்கள், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் .தி.சி.செல்வவிநாயகம் அவர்கள் உள்ளிட்ட பலர் உள்ளார்கள்.

பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) 2026 விண்ணப்பப் படிவம் வெளியிடப்பட்டுள்ளது
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) 2026 விண்ணப்பப் படிவம் வெளியிடப்பட்டுள்ளது






