லஞ்சம் பெற்றதாக கூடுவாஞ்சேரி பெண் ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

அரசு மற்றும் தனியார் மருத்துவர்களை மிரட்டி 12 லட்சம் பணம் பறித்த கூடுவாஞ்சேரி பெண் ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் மகிதா அன்ன கிறிஸ்டி, இவரிடம் மறைமலைநகரை சேர்ந்த ஒரு பெண் தனது 17வயது மகளை ரஞ்சித்(27), என்பவர் ஆசை வார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கியதாக புகார் செய்தார்.

இந்த புகாரின் பேரில் போக்சோ வழக்குப் பதிவு செய்து ரஞ்சித்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறுமியின் தாயாரிடம் விசாரித்த போது மறைமலை நகரில் இரண்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் அங்கு தான் கருவுற்ற போது மாத்திரைகள் வாங்கி கருகலைப்பு செய்ததாக தெரிவித்தார்.

இந்த தகவலை வைத்துக் கொண்டு ஆய்வாளர் மகிதா தனியார் மருத்துவமனை மருத்துவர் உமா மகேஸ்வரி என்பவரையும், தனியாக மருத்துவமனை நடத்தி வரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவர் பராசக்தி என்பவரையும் 17 வயது சிறுமிக்கு கருகலைப்பு செய்ததாகவும், அதனை காவல் துறையில் சொல்லாமல் மறைத்ததாகவும் மற்றும் கரு கலைப்பு மாத்திரை வழங்கி குற்றங்களை சுட்டிக்காட்டி பணம் கேட்டு மிரட்டிள்ளார்.

பணத்தை வாங்க, பன்னீர்செல்வம் என்ற வழக்கறிஞரை ஏற்பாடு செய்து அரசு மருத்துவரிடம் 10 லட்சம் ரூபாய் பணமும், தனியார் மருத்துவமனை மருத்துவரிடம் 2 லட்சம் ரூபாய் பணமும் லஞ்சமாக வாங்கியுள்ளார்.

இந்த தகவலை அறிந்த தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் ஆய்வாளர் மகிதா அன்ன கிறிஸ்டி மற்றும் வழக்கறிஞரை விசாரித்ததில் உண்மையென தெரியவந்தன அதன் பேரில் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

லஞ்சம் பெற்றதாக கூடுவாஞ்சேரி பெண் ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட