வாக்னர் குழு விவகாரம்: “ரஷ்யாவுடன் துணை நிற்போம்” – சீனா…

ரஷ்யா-உக்ரைன் இடையே கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக போர் நடந்துவருகிறது. இந்தப் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக வாக்னர் எனும் கூலிப்படைக் குழு செயல்பட்டது. இந்த நிலையில், சமீபகாம வாக்னர் குழுவுக்கும், ரஷ்யாவுக்கும் மத்தியில் மோதல் வெடித்தது. இதற்கிடையே ரஷ்ய அதிபர் புதினின் ஆட்சியைக் கவிழ்ப்போம் என வாக்னர் குழு அறிவித்தது. இதற்கு பதிலளித்த ரஷ்ய அதிபர் புதின்,’வாக்னர் குழுவின் செயல் ஒரு துரோகம் செய்வது போல் உள்ளது. இதற்கு வாக்னர் குழுவுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்படும்” என எச்சரித்திருந்தார். .ரஷ்ய தரப்பு, “யெவ்ஜெனி ரஷ்யாவில் இருந்து வெளியேற வேண்டும். அவர் வெளியேறினால் அவர் மீது எந்த குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படாது” எனத் தெரிவித்திருக்கிறது. இதனால் ரஷ்யாவிலிருந்து வெளியேறி பெருலஸ் நாட்டிற்கு யெவ்ஜெனி ப்ரிகோஜின் செல்ல திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் ரஷ்யாவில் வெடிக்க இருந்த உள்நாட்டு போர் தொடர்பான அச்சம் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் ரஷ்யாவுக்கு எதிரான வாகனர் படையின் எழுச்சி குறித்து சீனா அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிவிப்பில் ,”எங்களது நட்பு அண்டை நாடாகவும், ஒரு புதிய அத்தியாயத்தின் கூட்டுறவு பங்காளியாகவும் இருக்கும் ரஷ்ய நாட்டின் தேசிய உறுதித்தன்மை, வளர்ச்சி மற்றும் செழிப்பை காப்பதில் ரஷ்யாவுடன் சீனா எப்பொழுதும் துணை நிற்கும்” என்று சீனா கூறியிருக்கிறது. சீனாவின் இந்த அறிவிப்பு உலக அரசியலில் ஒரு முக்கியமான அறிவிப்பாக கருதப்படுகிறது. .

ஷெட்யூல்டு வகுப்பினருக்கான நலத்திட்டங்களின் செயலாக்கத்தை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, ‘பிஎம்-அஜய்’ இணையதளம், ‘அஜய்’ செயலியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்

பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான மேம்பாட்டுத் திட்டம் (பிஎம்-அஜய்) திட்டத்தை விரைவாகவும், தரமாகவும் செயல்படுத்தும் நோக்கில், இதற்கான இணையதளம் மற்றும் செயலியைமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார். இத்திட்டம், காகிதப் பயன்பாடற்ற முறையில், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, நிகழ்நேர அடிப்படையிலான பணி, அமலாக்க நடைமுறைக்கு மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா, செயலாளர் திரு. சுதான்ஷ் பந்த், மத்திய சமூக நீதித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் முன்னிலையில், ‘பிஎம்-அஜய்’ இணையதளம் மற்றும் ‘அஜய்’ செயலியைத் தொடங்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த செயலாளர்கள், மூத்த அதிகாரிகள்  இணையவழியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

வாக்னர் குழு விவகாரம்: “ரஷ்யாவுடன் துணை நிற்போம்” – சீனா…

ஷெட்யூல்டு வகுப்பினருக்கான நலத்திட்டங்களின் செயலாக்கத்தை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, ‘பிஎம்-அஜய்’ இணையதளம், ‘அஜய்’ செயலியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்

பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான மேம்பாட்டுத் திட்டம் (பிஎம்-அஜய்) திட்டத்தை விரைவாகவும், தரமாகவும் செயல்படுத்தும் நோக்கில், இதற்கான இணையதளம் மற்றும் செயலியைமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார். இத்திட்டம், காகிதப் பயன்பாடற்ற முறையில், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, நிகழ்நேர அடிப்படையிலான பணி, அமலாக்க நடைமுறைக்கு மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா, செயலாளர் திரு. சுதான்ஷ் பந்த், மத்திய சமூக நீதித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் முன்னிலையில், ‘பிஎம்-அஜய்’ இணையதளம் மற்றும் ‘அஜய்’ செயலியைத் தொடங்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த செயலாளர்கள், மூத்த அதிகாரிகள்  இணையவழியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்