விருதுநகர் மாவட்டம்- கூமாபட்டி பட்டியல் இன மக்களின் மீது…

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், கூமாபட்டி கிராமத்தில் கடந்த 30.09.2024 அன்று பரையர் சமூகத்தைச் சார்ந்த இளைஞர் முத்துகுமார் பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு சிலரால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தைக் கண்டித்து பட்டியல் இன மக்கள் சனநாயக ரீதியாக போராட்டம் நடத்தியதற்காக கூமாபட்டி காவல் நிலைய முதல் தகவல் அறிக்கை எண்.107, 108-ல் 133 நபர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், வத்திராயிருப்பு காவல் நிலைய முதல் தகவல் அறிக்கை எண்.237-ல் பெயரிட்ட 119 நபர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் படுகொலை செய்யப்பட்ட முத்துகுமாரின் மாமனார், அவரின் மைத்துனர் ஆகியோர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கூமாபட்டி கிராமத்தில் மூன்று வழக்குகளிலும் 60 பெண்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாநகர் சிம்மக்கல்லில் வசிக்கும் அய்யப்பன் த/பெ. உய்யப்பன் என்பவர் இந்தச் சம்பவங்களுக்கு சம்மந்தம் இல்லாத நபர் ஆவார்
இவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிவகாசியைச் சார்ந்த மைனர் அர்ச்சுன் த/பெ. மோகன் என்பவர் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்ள்ளது. அதிலும், குறிப்பாக கடந்த 06 ஆண்டுகளுக்கு முன்பாக திருச்சியில் இறந்த கூமாபட்டியைச் சார்ந்த ராஜா த/பெ. ஜேம்ஸ் என்பவர் மீது இரண்டு வழக்குகளிலும் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

இவ்வாறு காவல்துறை உரிய விசாரணை நடத்தாமல், திட்டமிட்டு கூமாபட்டி பட்டியல் இன மக்களின் மீது தொடுக்கப்பட்டுள்ள பொய் வழக்குகள் குறித்து நேற்று (12.11.2024) செவ்வாய்கிழமை காலை சென்னையில், ஒன்றிய அரசின் தேசிய பட்டியலின ஆணையத்தின் இயக்குநர் மரியாதைக்குரிய Dr.ரவிவர்மன் அவர்களை நேரடியாகச் சந்தித்து பொய் வழக்குகளை ரத்து செய்யக்கோரி மனு கொடுக்கப்பட்டது.

தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவர் ச.கருப்பையா தலைமையில், மாநில இளைஞரணிச் செயலாளர் பீமாராவ், சாத்தூர் ஒன்றியச் செயலாளர் அருண்பாண்டி ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட் நிறுவனத்தின் தேசிய அளவிலான சந்தை விரிவாக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத

விருதுநகர் மாவட்டம்- கூமாபட்டி பட்டியல் இன மக்களின் மீது…

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட் நிறுவனத்தின் தேசிய அளவிலான சந்தை விரிவாக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத