ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் நவீன எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேன் வசதி ஏற்படுத்தப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை:
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சட்டபேரவையில் ஆற்றிய உரையில், விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் உள்ள அரசு மருத்துவமனை, தினந்தோறும் 1,350 அளவுக்கான புறநோயாளிகளையும், 135 அளவில் உள் நோயாளிகளையும் பெற்றிருக்கின்ற ஒரு மருத்துவமனை. 24 மணி நேரமும் பிரசவம் என்கின்ற வகையில் மாதந்தோறும் 150 பிரசங்கள் நடைபெற்று வருகின்றன.
அந்த மருத்துவமனையைப் பொறுத்தவரையில் இப்போது onventional X-ray என்கிற வகையில் தினந்தோறும் 25-லிருந்து 30 பேருக்கு தற்போது பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஆனாலும் தமிழ்நாட்டின் முதலமைச்சருடைய அறிவுறுத்தலை, வழிகாட்டுதலைப் பெற்று உறுப்பினர் கோரியிருக்கின்ற நவீன எக்ஸ்ரேவும், சி.டி.ஸ்கேன் இயந்திரத்தையும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
ஸ்ரீவில்லிபுத்தூரைப் பொறுத்தவரையில், ஒரு மிகச்சிறந்த ஆன்மிக சுற்றுலா மையமாக இருந்து கொண்டிருக்கின்ற காரணத்தால், உறுப்பினர் எடுத்துச்சொல்லியிருப்பதைப்போல, சி.டி.ஸ்கேன், நவீன எக்ஸ்ரே கருவிகளை அம்மருத்துவமனையில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்ட அரசு மருத்துவமனையைப் பொறுத்தவரை இப்போதும்கூட Tl CEmONC கட்டடம் ஒன்று தமிழ்நாட்டின் முதலமைச்சருடைய வழிகாட்டுதலின்படி, 6 கோடியே 89 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. மகப்பேறு மற்றும் பச்சிளங் குழந்தைகளுக்கான பராமரிப்பு பிரிவு கட்டடமாக அந்தக் கட்டடப் பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாது கர்பிணிப் பெண்கள் மற்றும் விபத்தில் காயமடைந்து வருபவர்களுக்கான சிகிச்சை அளிப்பதற்கு 25 லட்சம் செலவில் ரத்த வங்கி கட்டடம் ஒன்றும் அம்மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஏற்கெனவே, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிக்குட்பட்ட கோமாப்பட்டி துணை சுகாதார நிலையம் 25 லட்சம் மதிப்பீட்டிலும், வா.புதுப்பட்டி துணை சுகாதார நிலையம் 20 லட்சம் மதிப்பீட்டிலும், கோட்டையூர் துணை சுகாதார நிலையம் 20 லட்சம் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. தற்போதும்கூட அந்த தொகுதியில் இடையன்குளம் துணை சுகாதார நிலையம் 20 இலட்சம் மதிப்பீட்டிலும், மல்லி துணை சுகாதார நிலையம் 20 இலட்சம் மதிப்பீட்டிலும், இராமசாமிபுரம் துணை சுகாதார நிலையம் 20 இலட்சம் மதிப்பீட்டிலும், குன்னூர் வட்டார பொது சுகாதாரப்பிரிவு கட்டடம் 50 லட்சம் செலவிலும் கட்டும் பணிகள் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது.
இரண்டு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் தேவையான சுற்றுச்சுவர்களை இந்த நிதிநிலையாண்டில், 15 வது நிதி ஆணையத்தின்மூலம் பெறப்படுகிற நிதியின்மூலம் அந்த இரண்டு சுகாதார நிலையங்களுக்கும் கட்டித் தருகிற பணி நடைமுறைக்கு கொண்டுவரப்படும்.
மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கு முதலமைச்சர் அறிவுறுத்தலுக்கேற்ப 1,021 மருத்துவர் பணியிடங்கள் M.R.Bன் மூலம் நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், அதற்கான தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் 2,3 வாரங்களில் அந்தத் தேர்வுப் பணிகள் முடிவுறும் நிலையில் இருக்கிறது. 1,021 பணியிடங்களுக்கு 25,000 மருத்துவர்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள். அவர்களின் 1,021 மருத்துவர்களைத் தேர்வு செய்து, மருத்துவமனைக்குத் தேவையான மருத்துவர் காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் நவீன எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேன் வசதி ஏற்படுத்தப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.