ஸ்ரீவி: பாரில் வெடிகுண்டு வீச்சு; மேலும் 2 பேர் கைது
கூமாபட்டி தனியார் மது பாரில் இலவசமாக மது கேட்டதில் ஏற்பட்ட தகராறில், நாட்டு வெடிகுண்டுகளை வீசியதில் பார் ஊழியர் மாயன் காயமடைந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கூமாபட்டி போலீஸார் ரவுடி ரமணி, ராஜா ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும், நாட்டு வெடிகுண்டுகள் இவர்களுக்கு எப்படி கிடைத்தன என்பது குறித்து விசாரணை நடத்தியதில், கூமாபட்டியை சேர்ந்த முத்துகிருஷ்ணன்(28), மம்சாபுரத்தை சேர்ந்த சந்தனகுமார்(28) ஆகியோரையும் கைது செய்தனர்.







