ஈரானின் பல்வேறு பகுதிகள் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்!
அமெரிக்கா தாக்குதல்!
📍. ஹார்முஸ் நீரிணையில் 3 வர்த்தக கப்பல்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து, ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களை தொடங்கியதால் பரபரப்பு.
ஈரான் போர் நிறுத்தத்தை மீறியதால், சக்திவாய்ந்த ராணுவத் தாக்குதலை தொடங்கி இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
நள்ளிரவு நடந்த தாக்குதலில் பெரும்பாலும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் குறிவைக்கப்பட்டதாக ஈரான் குற்றச்சாட்டு.பஹ்ரைன், குவைத் மீது ஈரான் தாக்குதல்!
📍. அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக பஹ்ரைன், குவைத் நாடுகளில் உள்ள 85 அமெரிக்க ராணுவ இலக்குகளை தாக்கியதாக ஈரான் ராணுவம் அறிவிப்பு.
அமைதி ஒப்பந்தத்தை மீறிய செயலுக்கான ஒரு ஆரம்பகட்ட எதிர்வினையே இது எனவும் ஈரான் எச்சரிக்கை. முன்னதாக, 3 வர்த்தக கப்பல்களை தாக்கியதாக கூறி ஈரான் மீது அமெரிக்கா மிகப்பெரிய தாக்குதல்களை நடத்தியிருந்தது.







