சென்னை:
மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் தென் மாநில முதல்வர்கள் மாநாடு நடத்தப்படுவது வழக்கம். ஆனால், கடந்த 2022-ம் ஆண்டுக்கு பிறகு இந்த மாநாடு நடைபெறவில்லை. இந்தநிலையில், 31-வது தென் மாநில முதல்வர்கள் மாநாடு இன்று (புதன்கிழமை) சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொடங்குகிறது.
இந்த மாநாட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை தாங்குகிறார். தமிழக முதல்வர் விஜய், கர்நாடக முதல்-வர் டி.கே.சிவக்குமார், கேரள மாநில முதல்வர் சதீசன், தெலுங்கானா முதல்-வர் ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதல்-வர் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
மேலும், அந்தந்த மாநில தலைமை செயலாளர்கள், உள்துறை செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்துகொள்கிறார்கள்.
மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு, பொருளாதார வளர்ச்சி, தொழில் முதலீடுகள், கூட்டுறவை பலப்படுத்துவது, கட்டமைப்பு மேம்பாடு, நீர்வள பகிர்வு, கல்வி, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், பேரிடர் மேலாண்மை, குற்றங்கள் தடுப்பு, எல்லை பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.
தற்போது காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகம் மற்றும் தமிழகம் இடையே முரண்பாடுகள் எழுந்த நிலையில் இந்த கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய மந்திரி அமித்ஷா இன்று மாலை 4.50 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு 7.40 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார்.

தலைநகர் சென்னையில் அச்சத்தில் தான் வாழ வேண்டுமா?: வேல்முருகன் வேதனை கேள்வி
சென்னை:தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்ட அறிக்கையில், “சென்னை வண்ணாரப்பேட்டை தங்கசாலை






