திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் கம்யூனிஸ்ட் கட்சியினரின் விவரங்களை சேகரிக்க ஆணையிட்ட துணை வட்டாட்சியர் (பயிற்சி) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
குஜிலியம்பாறையில் 10 நாட்களுக்கு முன்பு பயிற்சி வட்டாட்சியராக பணியாற்றி வந்த அய்யாசாமி அப்பகுதியில் உள்ள இடது கம்யூனிஸ்ட், வடது கம்யூனிஸ்ட் கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளின் பெயர், முகவரிகளை சேகரிக்க கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இந்த அறிக்கையானது மிக பெரிய சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டு திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை சம்பந்தப்பட்ட நிர்வாகிகளிடமும் புகார் அளித்தார். குஜிலியம்பாறை துணை வட்டாட்சிராக (பயிற்சி) பணிபுரிந்த வந்த அய்யாசாமியை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் துர்க்கா மூர்த்தி துறை ரீதியான நடவடியாக அவரை சென்னைக்கு இடமாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

தலைநகர் சென்னையில் அச்சத்தில் தான் வாழ வேண்டுமா?: வேல்முருகன் வேதனை கேள்வி
சென்னை:தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்ட அறிக்கையில், “சென்னை வண்ணாரப்பேட்டை தங்கசாலை






