கடலூர்:
கடலூர் மாநகராட்சியில் கடந்த தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை பரப்புரையாளராக பணியாற்றிய 26 பெண்கள் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்து 100 நாட்கள் ஆன நிலையில் திடீரென்று பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் ரூ.4000 சம்பளத்தில் பணியில் சேர்ந்தனர். தற்பொழுது 12,000 ரூபாய் ஊதியம் வாங்கி வந்த நிலையில், இவர்கள் வேலை செய்த ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தம் முடிந்தவுடன் இவர்களை பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. புதியதாக ஒப்பந்தம் எடுத்தவர்கள் தூய்மை பரப்புரையாளர்களுக்கு 23 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்க உள்ளனர்.
இந்நிலையில் தங்களை திடீரென பணி நீக்கம் செய்து, கூடுதல் ஊதியத்தில் புதியவர்களை பணியில் அமர்த்தும் செயலால் பொங்கி எழுந்த 26 பெண்கள் கடலூர் மாநகராட்சி நுழைவாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த பெண் பணியாளர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தலைநகர் சென்னையில் அச்சத்தில் தான் வாழ வேண்டுமா?: வேல்முருகன் வேதனை கேள்வி
சென்னை:தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்ட அறிக்கையில், “சென்னை வண்ணாரப்பேட்டை தங்கசாலை






