அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்) அம்பத்தூர், சென்னை – ல் 10.05.2024 முதல் 07.06.2024 வரை சேர்க்கை நடைபெற்று வருகிறது. எட்டாம் வகுப்பு தேர்ச்சி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு இல்லை. பயிற்சி அளிக்கப்படும் தொழிற் பிரிவுகள் விவரம் கீழே வழங்கப்பட்டுள்ளது.
பயிற்சியில் சேருவோருக்கு மாத உதவித்தொகை ரூ.750/- இலவச பஸ் பாஸ், மிதிவண்டி, பாட புத்தகங்கள், வரைபடக் கருவிகள், இரு செட் சீருடை , மூடு காலணி மற்றும் சிறந்த தொழிற் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்கப்படும் மற்றும் தமிழக அரசு வழங்கும் உயர்கல்வி உதவித்தொகை (6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளியில் பயின்ற) மாணவிகளுக்கு ரூ. 1000/- கூடுதலாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள் மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் – 5 ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.50/- நேரில் வர இயலாதவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என, சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
| வ.எண் | தொழிற் பிரிவுகள் | பயிற்சி காலம் | கல்வித் தகுதி |
| 1 | தையல் தொழிற்நுட்பம் | 1 வருடம் | 8 ஆம் வகுப்பு தேர்ச்சி |
| 2 | கோபா (NCVT) | 1 வருடம் | 10 ஆம் வகுப்பு தேர்ச்சி |
| 3 | கட்டிடப் பட வரைவாளர் | 2 வருடம் | 10 ஆம் வகுப்பு தேர்ச்சி |
| 4 | Stenography (Tamil & English) | 1 வருடம் | 10 ஆம் வகுப்பு தேர்ச்சி |