தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் உள்ள கூட்டரங்கில் தமிழ்நாடு மூலிகைப் பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்துக் கழகம் (டாம்ப்கால்) தயாரித்துள்ள 6 அழகு சாதனைப் பொருட்களை அறிமுகம் செய்துவைத்தார். இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலாளர் ப.செந்தில்குமார், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனர் சு.கணேஷ், டாம்ப்கால் பொது மேலாளர் து.மோகன்ராஜ், சென்னை யுனானி மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.முஸ்தாக் அகமது, இணை இயக்குனர் மரு.பார்த்திபன் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :54 பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்திண்மைஉண் டாகப் பெறின். பொருள்கற்பென்னும் திண்மை





