அரசு விடுதி மாணவர்கள் மறியல் – தரமற்ற உணவு வழங்குவதாக புகார்….

திருச்சி:
திருச்சி கிராப்பட்டியில் கல்லூரி மாணவர்களுக்கான பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அரசு விடுதி உள்ளது. இதில் பல்வேறு கல்லூரி மாணவர்கள் 120 பேர் தங்கி உள்ளனர்.

இந்த விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக மாணவர்கள் புகார் கூறி வந்தனர். இந்நிலையில், நேற்று காலை வழங்கிய உணவும் தர மற்று இருப்பதாக குற்றம்சாட்டி, அந்த உணவை பெரிய பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, திருச்சி – மதுரை சாலையில் கிராப்பட்டி மேம் பாலத்தில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து எடமலைப்பட்டி புதூர் காவல் ஆய்வாளர் விஜய பாஸ்கர் மற்றும் போலீஸார் சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், மாணவர்கள் மறியலை கைவிட மறுத்து விட்டனர். இதையடுத்து, போலீஸார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள், திடீரென உணவுடன் ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டு செல்ல முயன்றனர்.

போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை தடுத்து நிறுத்தி, இந்தப் பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி தீர்வு காணப்படும் என உறுதியளித்ததின் காரணமாக மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு திரும்பி சென்றனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

அரசு விடுதி மாணவர்கள் மறியல் – தரமற்ற உணவு வழங்குவதாக புகார்….

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட