அரூர் பங்குமக்கள் கோரிக்கையை நிராகரிக்கும் தர்மபுரி மறை மாவட்ட கத்தோலிக்க ஆயர் இல்லம்: போராட்டம் நடத்த கிறிஸ்தவ மக்கள் முன்னணி முடிவு

சென்னை:
கிறிஸ்தவ மக்கள் முன்னணி நிறுவன தலைவர் மரிய ஆரோக்கியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிறிஸ்தவ ஆலய ஆயர்களை பற்றியோ, குருக்களை பற்றியோ, அருட்சகோதரிகளை பற்றியோ, எந்த சூழ்நிலையிலும் தரக்குறைவாக எழுத கூடாது, பேசக்கூடாது என்ற நல்லெண்ணத்தோடு “கிறிஸ்துவ மக்கள் முன்னணி”யினை வழிநடத்தி வருகின்றேன்.
இந்த அமைப்பு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளது. புதுச்சேரி மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களிலும் கிறிஸ்துவ மக்கள் முன்னணி பரந்து விரிந்துள்ளது. இது சபை வேறுபாடுயின்றி, சாதிய வேறுபாடு இன்றி அனைத்து கிறிஸ்தவர்களும் சங்கமித்துள்ள பேரமைப்பாகும்.
இத்தகைய சிறப்புமிக்க இயக்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் என்ற முறையில், தர்மபுரி மறைமாவட்டம் அரூர் பங்கில் பல ஆண்டுகளாக மக்களுக்கும்,சேசுசபை குருக்களுக்கும் இடையே நடைபெற்று வரும் போராட்டத்தினால் பங்கும், பங்கின் பணிகளும், மக்களும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.
இந்த நிலையில் அரூர் பங்கு மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு குரல் கொடுக்கும் வகையில் தர்மபுரி மாவட்ட கிறிஸ்துவ மக்கள் முன்னணி தோழர்களுடன் இணைந்து மாநில துணைத் தலைவர், திருச்சி ஏ.ஜெ.சாலமோன், மாநில செயலாளர் கடலூர் ராயப்பன், துணை செயலாளர் மரியசூசை (புதுக்கோட்டை)பொருளாளர் திண்டுக்கல் ஆரோக்கியதாஸ், தலைமை ஒருங்கிணைப்பாளர் விழுப்புரம் எலியாஸ் ஆகிய நிர்வாகிகளும் கலந்து கொண்டு அரூரில் 25.04.2023 அன்று மாபெறும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தோம்.
அதற்கு முன்பாக தர்மபுரி மறைமாவட்ட ஆயர் இல்லத்தினை தொடர்பு கொண்டு சுமுகமான முடிவு ஏற்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டு தொடர்பு கொண்டேன். ஆயர் இல்லத்தில் இருந்து அர்த்தமற்ற பொறுப்பில்லாத பதில் வந்தது. இதனை கண்டு திடுக்கிட்டு போனேன். நமக்கே பதில் இப்படி என்றால், அரூர் பங்கு மக்கள் எத்தனை வேதனைகளையும், அவமானங்களையும், சந்தித்து இருப்பார்கள் என்பதை உணர்ந்தேன்.
எனவே, தற்போது இந்த போராட்டத்தை கைவிட்டுவிட்டு ஆயர் இல்லத்திற்குள் நுழையும் போராட்டம் என அறிவிக்க உள்ளேன். அன்று ஆயர் இல்லம் அதிரவேண்டும். அதிகார போதை இறங்க வேண்டும். புனிதமான வெள்ளை அங்கியினை கைப்பற்றிவைத்து விட்டு ஓடிவிடலாமா என்று எண்ணும் வகையில் போராட்டத்தை நடத்த வேண்டும். மாநிலத்தின் பிற இடங்களில் உள்ள ஆயர் இல்லங்களில் கிறிஸ்துவ மக்கள் முன்னணி மற்றும் நமது தோழமை அமைப்புகளின் ஆதரவுடன் முற்றுகை போராட்டம் நடைபெறும் வகையில் போராட்ட யுக்திகளை வகுத்தும்,தோழமை அமைப்புகளின் ஆதரவையும் திரட்டி வருகின்றேன்.
தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் அரூர் பங்கு மக்களின் பிரச்சனையினை கொண்டு சென்று மக்களின் ஆதரவுடன் மாபெரும் போராட்டம் விரைவில் நடைபெறும் என்பதை பொறுப்பற்ற சுயநலவாத கும்பலான தர்மபுரி ஆயர் இல்லத்திற்கு எச்சரிக்கை விடுக்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஷெட்யூல்டு வகுப்பினருக்கான நலத்திட்டங்களின் செயலாக்கத்தை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, ‘பிஎம்-அஜய்’ இணையதளம், ‘அஜய்’ செயலியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்

பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான மேம்பாட்டுத் திட்டம் (பிஎம்-அஜய்) திட்டத்தை விரைவாகவும், தரமாகவும் செயல்படுத்தும் நோக்கில், இதற்கான இணையதளம் மற்றும் செயலியைமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார். இத்திட்டம், காகிதப் பயன்பாடற்ற முறையில், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, நிகழ்நேர அடிப்படையிலான பணி, அமலாக்க நடைமுறைக்கு மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா, செயலாளர் திரு. சுதான்ஷ் பந்த், மத்திய சமூக நீதித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் முன்னிலையில், ‘பிஎம்-அஜய்’ இணையதளம் மற்றும் ‘அஜய்’ செயலியைத் தொடங்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த செயலாளர்கள், மூத்த அதிகாரிகள்  இணையவழியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

அரூர் பங்குமக்கள் கோரிக்கையை நிராகரிக்கும் தர்மபுரி மறை மாவட்ட கத்தோலிக்க ஆயர் இல்லம்: போராட்டம் நடத்த கிறிஸ்தவ மக்கள் முன்னணி முடிவு

ஷெட்யூல்டு வகுப்பினருக்கான நலத்திட்டங்களின் செயலாக்கத்தை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, ‘பிஎம்-அஜய்’ இணையதளம், ‘அஜய்’ செயலியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்

பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான மேம்பாட்டுத் திட்டம் (பிஎம்-அஜய்) திட்டத்தை விரைவாகவும், தரமாகவும் செயல்படுத்தும் நோக்கில், இதற்கான இணையதளம் மற்றும் செயலியைமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார். இத்திட்டம், காகிதப் பயன்பாடற்ற முறையில், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, நிகழ்நேர அடிப்படையிலான பணி, அமலாக்க நடைமுறைக்கு மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா, செயலாளர் திரு. சுதான்ஷ் பந்த், மத்திய சமூக நீதித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் முன்னிலையில், ‘பிஎம்-அஜய்’ இணையதளம் மற்றும் ‘அஜய்’ செயலியைத் தொடங்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த செயலாளர்கள், மூத்த அதிகாரிகள்  இணையவழியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்