செங்குன்றம்.
போதையில்லா தமிழகத்தை உருவாக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வரும் தமிழ்நாடு முதல்வர். சி.ஜோசப் விஜய் உத்தரவின் பேரில் ஆவடி காவல் ஆணையரகம், சென்னை சோசியல் ஸ்டார்ஸ் லயன்ஸ் சங்கம் இணைந்து 1000த்திற்கும் மேற்பட்ட பள்ளி – கல்லூரி மாணவ – மாணவிகள் கலந்து கொண்ட போதை ஒழிப்பு விழிப்பு ணர்வு ஊர்வலம் செங்குன்றம் காமராஜர் சிலையிலிருந்து பேருந்து நிலையம் வழியாக கூட் ரோடு நேதாஜி சிலை வரை நடைபெற்றது.
ஊர்வலத்திற்க்கு ஆவடி காவல் ஆணையரக இணை ஆணையர். மருத்துவர். ஆர்.சிவக்குமார் தலைமையேற்று கொடியசைத்து துவக்கி வைத்து பேசும்போது போதையால் பல குற்றங்கள் உருவாகிறது. போதைபொருட்களை பயன்படுத்தக்கூடாது. போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என முதல்வர் தீவிர முயற்சி எடுத்து அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். அதற்கு உங்கள் ஒத்துழைப்பு தேவை.
என்றார்.
போதையில்லா தமிழகத்தை உருவாக்கும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
செங்குன்றம் காவல் சரக உதவி ஆணையர் பிராங்க் டி ரூபன், மீஞ்சூர் காவல் ஆய்வாளர். ஆறுமுகம், செங்குன்றம் போக்குவரத்து காவல் ஆய்வாளர். சந்திரமவுலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சென்னை சோசியல் ஸ்டார்ஸ் லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர். எம்.முகம்மது அபுபக்கர், இயற்கை பாதுகாப்புக் கூட்டமைப்பு மாநிலத் தலைவர். இ.மாரியப்பன், மாநில அமைப்பாளர் செங்குன்றம் காஜா, தமிழ் சிங்கம் லயன்ஸ் சங்கச் செயலாளர் டெக்கரேட்டர் பி.சேகர் ஆகியோர் நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தனர்.
இந்நிகழ்வில் லயன்ஸ் சங்க மண்டலத் தலைவர் கருப்பசாமி, வட்டாரத் தலைவர் விநாயகம், சென்னை சோசியல் ஸ்டார்ஸ் லயன்ஸ் சங்கச் செயலாளர் எஸ்.கோபி, பொருளாளர் ஜீலான், ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்சிட்டி துணைத்தலைவர் சக்தி, ஆர்.பி. கோத்தி ஜெயின் மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர் மோ.மகாலட்சுமி, சமூக சேவகர் அப்துல்காதர், விவேகானந்தா மெட்ரிக் பள்ளி முதன்மை நிர்வாக அதிகாரி அருண்மொழி வர்மன், த.வெ.க. நகரச் செயலாளர் கே.விஜி உள்பட பலர் கலந்து
கொண்டனர்.
ஊர்வலத்தில் இயற்கை பாதுகாப்புக் கூட்டமைப்பு, ஆர்.பி. கோத்தி ஜெயின் மகளிர் கல்லூரி, பிரசாந்த் மருத்துவமனை, ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட் சிட்டி,
சில்ரன்ஸ்
பேரடைஸ், எலைட், குட்வேர்ட், கலைவாணி, விவேகானந்தா, ஆயிஷா, இலாஹி ஆகிய பள்ளி மாணவ,மாணவிகள் 1000த்திற்குமேல் கலந்து கொண்டனர்.






