சென்னை:
தீபாவளி பண்டிகைக்கு பிறகு தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்தது. தீபாவளி பண்டிகை நேரத்தில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. அதாவது தீபாவளிக்கு முந்தைய நாளான 11ம் தேதி ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை சவரன் ரூ.360 வரை குறைந்து, ஒரு சவரன் ரூ.45,800க்கு விற்கப்பட்டது. விலை குறைவால் தீபாவளி பண்டிகை நாட்களில் தங்கம் விற்பனை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்து காணப்பட்டது. தீபாவளிக்கு பிறகு தங்கம் விலை ஏற்றத்தில் இருந்தது.
சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,755-க்கு விற்பனையானது. ஆதேபோல சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.20க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.80,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.







