மதுரை:
மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் நடைபெற்ற விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் பிறகு ‘திருமா படிப்பகம்’ என்ற நூலகத்தை திறந்து வைத்தார். இதில் தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டது.
தொடர்ந்து தொண்டர்களிடையே உரையாற்றி திருமாவளவன், “முன்பெல்லாம் எம்.பிக்கள் என்றால் உரிய மரியாதை இருக்கும். எம்.பி கடிதம் கொடுத்தால் அதற்கு மரியாதை இருக்கும். கடிதம் கொடுத்தால் பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்பு கிடைக்கும், பெட்ரோல் பங்க் கிடைக்கும். வீட்டு சமையல் கேஸ் இணைப்பு கிடைக்கும், சிபாரிசில் வேலை கிடைக்கும்.
ஆனால் அதெல்லாம் அந்த காலம். இப்ப எம்.பிக்கு மரியாதையே இல்லை. எம்பி என்றால் என்ன தம்பி என்கிறார்கள் அவ்வளவுதான் மரியாதை. எனவே, அனைவரும் படித்து தேர்வு எழுதி வெற்றிபெற்று பணியில் சேரவேண்டும். நன்கு படிக்க வேண்டும்” என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்





