இன்று (22.06.2023) நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு , சென்னை கலைவாணர் அரங்கத்தில் அனைத்து மாநகராட்சி ஆணையாளர்கள்,
நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் இயக்குநர்களுக்கு, தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தம்) சட்டம் 2022 மற்றும் விதிகள் 2023 தொடர்பான
பயிலரங்கத்தினை தொடங்கி வைத்து, தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தம்) சட்ட விதிகள் தொகுப்பினை பயிற்சி பெறும் அலுவலர்களிடம் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.சிவ்தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள், கூடுதல் தலைமைச் செயலாளர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் மரு.ஜெ.இராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் இரா.கிர்லோஷ் குமார், இ.ஆ.ப., தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் திரு.வி.தட்சிணாமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள், பேரூராட்சிகள் இயக்குநர் கிரண் குராலா, இ.ஆ.ப., நகராட்சி நிருவாக இயக்குநர் ப.பொன்னையா, இ.ஆ.ப., அவர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.








