சென்னை:
கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மகன் ஏ.ஆர்.அமீனின் கார் விபத்தில் சிக்கியது. இதில் லேசான காயங்களுடன் அனைவரும் உயிர் தப்பினர்.
இன்று அதிகாலை ஏ.ஆர்.அமீன் தனது நண்பர் பார்கவ் என்பவருடன் கோயம்பேட்டில் இருந்து காரில் வந்துள்ளார். கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே அவரது கார் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த கால் டாக்சி மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் ஏ.ஆர்.அமீன், அவரது நண்பர் பார்கவ், மற்றும் கால் டாக்சி டிரைவர் அனைவரும் லேசான காயங்களுடன் தப்பி உள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏ.ஆர்.ரகுமானின் மகன் ஏ.ஆர்.அமீன் பயணம் செய்த கார் விபத்துக்குள்ளானது தமிழ் திரை உலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கார் விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.அமீன் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் சென்னை காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் இருவரும் சிகிச்சை முடிந்து இருவரும் வீடு திரும்பினர். எதிரில் வந்த கார் ஓட்டுநர் லேசான காயங்களுடன் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, வீடு திரும்பியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமீன், 2015ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன் ஆகியோரின் நடிப்பிலும் வெளிவந்த ’ஓ காதல் கண்மணி’ படத்தில் பாடகராக அறிமுகமானவர். பின்னர் சிலம்பரசன் நடித்த பத்து தல படத்தில் ‘நினைவிருக்கா’ என்ற பாடலை பாடியுள்ளார். தொடர்ந்து ராம் சரண் நடிப்பில் வெளியான ‘பெத்தி’ படத்திலும் ‘சிக்ரி’ என்ற பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கார் விபத்தில் சிக்கிய இசையமைப்பாளத் ஏ.ஆர்.ரகுமானின் மகன் அமீன்
சென்னை:கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மகன் ஏ.ஆர்.அமீனின் கார் விபத்தில்






