இன்று சென்னை சிந்தாதிரிப்பேட்டை சென்னை குடிநீர் வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் தலைமையில் சென்னை குடிநீர் வாரியம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ் குமார், அரசு முதன்மைச் செயலாளர், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தா.கார்த்திகேயன், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.இராதாகிருஷ்ணன், சென்னை குடிநீர் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் இரா.கிர்லோஷ் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலக் குழுத்தலைவர்கள்,
நிலைக்குழுத் தலைவர்கள், கூடுதல்/இணை/துணை ஆணையர்கள், சென்னை குடிநீர் வாரியத்தின் செயல் இயக்குநர், நிதி இயக்குநர், பொறியியல் இயக்குநர், தலைமைப் பொறியாளர்கள், கண்காணிப்புப் பொறியாளர்கள், பகுதி அலுவலர்கள், பகுதிப் பொறியாளர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






