கும்பகோணம்:
கும்பகோணத்தில் கூடுதல் போதைக்காக மதுவில் சானிடைசர் கலந்து குடித்த இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் பகுதியில் கொத்தனாராக வேலை செய்பவர்கள் சவுந்தரராஜ், பாலகுரு. இவர்கள் மேலக்காவேரி பகுதியில் உள்ள காவிரி ஆற்றின் படித்துறைக்கு சென்று மது அருந்தியுள்ளனர். கூடுதல் போதைக்காக மதுவில் சானிடைசர் கலந்து குடித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலை அவர்கள் இருவரும் மேலக்காவேரி காவிரி ஆற்றின் படித்துறையில் இறந்து கிடந்தனர். இதுகுறித்து தகவல அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடல்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம். அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தகவல் எக்ஸ்பிரஸ் குழு தெரிவித்துக் கொள்கிறது
மயிலு சப்பானி பரட்டை கூத்து குறுவம்மா இதுவெல்லாம் இயக்குனர் இமயம் பாரதிராஜா படைத்த





