கேலோ இந்தியா திறனறியும் போட்டிகள்…

விளையாட்டுக்களில் திறமையான இளம் வீரர்களை அடையாளம் கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் விதமாக, கேலோ இந்தியா திறனறியும் போட்டிகள் சென்னையில் கடந்த 23-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை  நடைபெற்றன.

மத்திய அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய விளையாட்டு ஆணையம் இந்தப் போட்டிகளை நடத்துகிறது. சென்னையை தொடர்ந்து சேலத்தில் வரும் 6-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை இந்தப் போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்திய விளையாட்டு ஆணையத்தின் பயிற்சி மையம் சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு அரங்கத்தில் இந்தப் போட்டிகளை நடத்துகிறது. 6-ந் தேதி தடகள போட்டிகள் நடைபெறும். 7-ந் தேதி கபடி, 8-ந் தேதி கோ-கோ, 9-ந் தேதி வாலிபால், 10-ந் தேதி கால்பந்துப் போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு நாளும் காலை 7 மணி முதல் போட்டிகள் நடைபெறும்.

தொடக்க நாளில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் வெள்ளிப்பதக்கம் வென்ற பவித்ரா தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

கேலோ இந்தியா திறனறியும் போட்டிகள்…

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)