தூத்துக்குடி திரேஸ்புரத்திலிருந்து கடலுக்கு சங்கு குளிக்கச் சென்றார் அப்போது நடுக்கடலில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி திரேஸ்புரம் மாதவ நாயர் காலணியைச் சேர்ந்தவர் ரவிக்குமார் மகன் கெவிஸ்டன் (21) சங்கு குளி தொழிலாளி இவர் நேற்று வழக்கம்போல் சங்கு குளிப்பதற்க்காக கடலுக்கு சென்றுள்ளார். நடுக்கடலில் திடீரென அவருக்கு மூச்சு தினறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சக மீனவர்கள் உடனே மீட்டு படகை கரைக்கு கொண்டுவந்தனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு கெவிஸ்டன்னை பரிசோதனை செய்த டாக்டர் அவர் இறந்து பல மணிநேரம் ஆகிறது என்று கூறினர். இதையடுத்து இறந்த கெவிஸ்டன் உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு பொது மருத்துவமனைக்கு செல்லப்பட்டு அங்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி மாவட்ட மரைன் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.