சென்னையில் தேசிய சணல் வாரிய கண்காட்சி

மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய சணல் வாரியத்தின் சார்பில் சணல் கண்காட்சி சென்னை மைலாப்பூரில் உள்ள காமதேனு திருமண மண்டபத்தில் நேற்று தொடங்கியது, வரும் 19-ம் தேதி வரை நடைபெறுகிறது.

தமிழ்நாடு வேளாண்மைத் துறை ஆணையர் எல்.சுப்பிரமணியன் சணல் கண்காட்சியைத் தொடங்கிவைத்தார். கண்காட்சியை கொல்கத்தா தேசிய சணல் வாரியத்தின் சந்தைப்படுத்துதல் தலைவர் டி.ஐயப்பன் ஒருங்கிணைத்துள்ளார். மத்திய அரசின் ஜவுளிக் குழுவின் உதவி இயக்குநர் பூர்ணிமா, தரக்கட்டுப்பாட்டு அலுவலர் பொன்னுசாமி உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வின்போது பேசிய தமிழ்நாடு வேளாண்மைத் துறை ஆணையர் எல்.சுப்பிரமணியன், தேசிய சணல் வாரியத்தின் பல்வேறு திட்டங்களை பயன்படுத்தி சணல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழில் முனைவோர் பல்வேறு சணல் பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும், இத்தகையை தொழில் நிறுவனங்கள் பெருநிறுவனங்களை அணுகி, சணல் தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

கொல்கத்தா தேசிய சணல் வாரியத்தின் சந்தைப்படுத்துதல் தலைவர் டி.ஐயப்பன் பேசுகையில், தேசிய சணல் வாரியத்தின் திட்டங்களின் கீழ், பலன்களை பெறுவதற்கு தென் மாநிலங்களைச் சேர்ந்த சணல் தொழிலில் ஈடுபடுவோர் முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

சணல் தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்களின் பெண் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகைத் திட்டம், உற்பத்தியுடன் கூடிய சார்ந்த ஊக்கத்தொகைத் திட்டம், சணல் சில்லரை விற்பனை நிறுவனங்களுக்கான திட்டம் உள்ளிட்ட தேசிய சணல் வாரியத்தின் பல்வேறு தொழில் திட்டங்களுக்கான மானிய உதவிகள் குறித்தும் அவர் பட்டியலிட்டார்.

கொல்கத்தா தேசிய சணல் வாரியத்தின் சார்பில் சென்னை மையிலாப்பூர் காமதேனு திருமண மண்டபத்தில் நேற்று தொடங்கியது வரும் 19ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணிவரையும் கண்காட்சி நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியில் பொதுமக்கள் கட்டணமின்றி அனுமதிக்கப்படுகிறார்கள்.

கண்காட்சியில் சணலால் செய்யப்பட்ட பொம்மைகள், சணல் பைகள், பரிசுப் பொருட்கள், காலணிகள், தரைவிரிப்புகள், கைவினைப்பொருட்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

சென்னையில் தேசிய சணல் வாரிய கண்காட்சி

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.