அண்மை செய்தி
பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான நலத்திட்டங்களின் செயலாக்கத்தை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, ‘பிஎம்-அஜய்’ இணையதளம், ‘அஜய்’ செயலியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார் திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் IIT Madras Launches Advanced Ocean Engineering Research Facility Funded by Mazagon Dock Shipbuilders Limited தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது. சட்டப்பேரவையில் 44 ஆக குறையும் அதிமுகவின் பலம்

சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கியது பட்டினி போராட்டம்….

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் 72 மணிநேர பட்டினி போராட்டம் சென்னை சேப்பாக்கத்தில் இன்று தொடங்கியது. காலமுறை ஊதியம் நிர்ணயிக்க வேண்டும். ஓய்வூதியம் ரூ.9000 வழங்க வேண்டும். 52 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்பவேண்டும், சத்துணவு மையங்கள் மூலம் காலை உணவு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெறுகிறது. இன்று முதல் 29-ந்தேதி வரை 4 நாட்கள் உணவு உட்கொள்ளாமல் தண்ணீர் மட்டுமே குடித்து போராட்டத்தை கொண்டுசெல்ல திட்டமிட்டுள்ளனர். போராட்டத்துக்கு மாநில தலைவர் ஆர்.கலா தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் மலர்விழி, மாநில துணைத் தலைவர்கள் பேயத் தேவன், பெரியசாமி, அண்ணாதுரை, தமிழரசன், மஞ்சுளா, வாசுகி, ஜெயந்தி, மாநில செயலாளர்கள் கற்பகம், சுமதி, மகேஸ்வரி, பாண்டிச்செல்வி, லதா, நிர்மலா ஜெஸி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய தொழிற்சங்க மைய பொதுச்செயலாளர் ஜி.சுகுமாரன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். நிர்வாகிகள் வாசுகி, சுகந்தி சீனிவாசன், சரவணத்தமிழன், சாம்ராஜ், ஸ்ரீதரன் உள்ளிட்ட பலர் வாழ்த்தி பேசினார்கள். அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் அன்பரசு கலந்துகொண்டு பேசுகிறார். போராட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சத்துணவு அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் குறித்து மலர்விழி கூறியதாவது:-

காலை முறை ஊதியம், ஓய்வூதியம், காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டினி போராட்டத்தை தொடங்கி உள்ளோம். தேர்தல் கால வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். இந்த போராட்டத்தால் பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவு வழங்குவதில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. சமையலர்கள், உதவியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். 72 மணிநேரம் பட்டினியாக இருந்து எங்கள் பிரச்சனையை அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்வதே இந்த போராட்டத்தின் நோக்கம். அரசு எங்களை அழைத்து பேசி எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். என்று கூறினார்.

ஷெட்யூல்டு வகுப்பினருக்கான நலத்திட்டங்களின் செயலாக்கத்தை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, ‘பிஎம்-அஜய்’ இணையதளம், ‘அஜய்’ செயலியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்

பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான மேம்பாட்டுத் திட்டம் (பிஎம்-அஜய்) திட்டத்தை விரைவாகவும், தரமாகவும் செயல்படுத்தும் நோக்கில், இதற்கான இணையதளம் மற்றும் செயலியைமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார். இத்திட்டம், காகிதப் பயன்பாடற்ற முறையில், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, நிகழ்நேர அடிப்படையிலான பணி, அமலாக்க நடைமுறைக்கு மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா, செயலாளர் திரு. சுதான்ஷ் பந்த், மத்திய சமூக நீதித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் முன்னிலையில், ‘பிஎம்-அஜய்’ இணையதளம் மற்றும் ‘அஜய்’ செயலியைத் தொடங்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த செயலாளர்கள், மூத்த அதிகாரிகள்  இணையவழியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கியது பட்டினி போராட்டம்….

ஷெட்யூல்டு வகுப்பினருக்கான நலத்திட்டங்களின் செயலாக்கத்தை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, ‘பிஎம்-அஜய்’ இணையதளம், ‘அஜய்’ செயலியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்

பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான மேம்பாட்டுத் திட்டம் (பிஎம்-அஜய்) திட்டத்தை விரைவாகவும், தரமாகவும் செயல்படுத்தும் நோக்கில், இதற்கான இணையதளம் மற்றும் செயலியைமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார். இத்திட்டம், காகிதப் பயன்பாடற்ற முறையில், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, நிகழ்நேர அடிப்படையிலான பணி, அமலாக்க நடைமுறைக்கு மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா, செயலாளர் திரு. சுதான்ஷ் பந்த், மத்திய சமூக நீதித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் முன்னிலையில், ‘பிஎம்-அஜய்’ இணையதளம் மற்றும் ‘அஜய்’ செயலியைத் தொடங்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த செயலாளர்கள், மூத்த அதிகாரிகள்  இணையவழியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்