சென்னையில் செம்மொழி பூங்காவில் வருகின்ற ஜூன் 3ஆம் தேதி முதல் 5-ம் தேதி வரை மலர் கண்காட்சி நடத்தப்படும் என்று தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது. பெங்களூரு, உதகை மற்றும் ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மலர் வகைகளை கொண்டு கண்காட்சி நடத்தப்படுகிறது. மலர் கண்காட்சியை பொதுமக்கள் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையிடலாம்என தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.
செம்மொழி பூங்காவில், அரியவகை மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவை, தாவரவியல் பயிலும் மாணவர்களுக்களுக்கு உதவியாக உள்ளது. கோடை காலத்தில், அரியவகை மலர்களை பயன்படுத்தி, மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இவை, நீலகிரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து எடுத்துவரப்படுகிறது. மலர் கண்காட்சியை காண வரும் குழந்தைகள் பொழுதை கழிக்கவும், பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ளன. மற்ற பூங்காக்களிலும், படிப்படியாக கண்காட்சி நடத்தப்படும் என்று தோட்டக்கலைத் துறை இயக்குனர் பிருந்தாதேவி கூறினார்.







