தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் மே.3 உலக பத்திரிகை சுதந்திர தினத்தன்று சென்னை கலைவானர் அரங்கில் பத்திரிகை/ ஊடகவியலாளர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிப் பட்டறை நடத்தப் பட்டது. செய்தித் துறை அமைச்சர் மு.பொ.சாமிநாதன் குத்துவிளக்கேற்றி பயிற்சிப்பட்டறையைத் தொடங்கி வைத்தார். நீதியரசர் .சந்துரு,மே நாள் எம்.பி., டி.கே.எஸ். இளங்கோவன்,தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் கோமகன் மூத்த பத்திரிகையாளர் கோலப்பன் உள்ளிட்டோர் பயிற்சி வகுப்பு கள் நடத்தினர். மாநிலம் முடிவதிலிருந்தும் மாவட்ட,வட்ட பத்திரிகையாளர்கள் பலர் திரளாகக் கலந்து கொண்டனர். செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் மோகன் நன்றி தெரிவித்தார். பத்திரிகையாளர்கள் சார்பில் பத்திரிகையாளர் நலவாரிய செயல் பாடுகள், நலத் திட்ட உதவிகள், சமூக பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்தன கோரிக்கை களை அரசு நிறைவேற்றித்தர வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதில் தகவல் எக்ஸ்பிரஸ் நிறுவனர் ஆசிரியர் மற்றும் நிறுபர்கள் கலந்துகொண்டனர்.










