சென்னை:
சென்னை சைதாப்பேட்டையில் போதை பொருட்கள் வைத்திருந்ததாக ௨ பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் தீவிர போதை பொருள் தடுப்பு நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் சென்னை சைதாப்பேட்டையில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னை மேற்கு சைதாப்பேட்டை பஸ்நிலையம் அருகே சுடுகாடு அமைந்துள்ள பகுதியில் இருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றித்திரிந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர்கள் சென்னை சைதாப்பேட்டை கொத்தவால்சாவடியை சேர்ந்த அருள் (வயது 22) என்பதும், சென்னை ஜாபர்கான்பேட்டையை சேர்ந்த சரண் (19) என்பதும், அவர்கள் ஆந்திராவில் இருந்து போதை பொருட்களை வாங்கி வந்து விற்பனை செய்வது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை சைதாப்பேட்டை குமரன் நகர் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 1014 போதை மாத்திரைகள், 12 போதை ஊசிகள், 5 ஹான்ஸ் ஒரு பாக்கெட் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 58: பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்புத்தேளிர் வாழும் உலகு. பொருள்நற்பண்பு பெற்றவனைக்




