அண்மை செய்தி
பிரதமரின் சூரியசக்தி வீடு மின்சாரத் திட்டத்தின் கீழ் 48 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பயனடைந்துள்ளன அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான பாலமாக ஊடகங்கள் செயல்படுகின்றன: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு எம் சிவகுரு பிரபாகரன் நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் டெல்லி விரைவு நீதிமன்றத்தின் முதல் விசாரணைக்கே அரசுத் தரப்பில் யாரும் ஆஜராகாததால் நீதிபதி அதிருப்தி திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் சென்னை சேத்துப்பட்டில் செயல்பட்டு வரும் எம்.சி.சி. பப்ளிக் பள்ளி தனது 10ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு ஒரே நிகழ்வில் 56 உலகச் சாதனைகளை நிகழ்த்தி புதிய வரலாறு படைத்துள்ளது திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

டெல்லி சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு! பெரும்பான்மையை நிரூபிக்கிறார் அதிஷி!

டெல்லி மதுபான கொள்கை வழக்கில், முதல்வராக இருந்தபோது கெஜ்ரிவால் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இந்த கடந்த 2022ல் இது குறித்து வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, இரண்டு ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிய நேரத்தில் அதிரடியாக அவரை கைது செய்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது.

மத்திய அரசின் விசாரணை அமைப்புகள், எதிர்க்கட்சிகளுக்கு எதிராக செயல்படுவதாக ஏற்கெனவே குற்றச்சாட்டுகள் இருந்தன. இதனை உறுதி செய்யும் விதமாக தேர்தல் நெருங்கும் சமயத்தில் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருந்தது, இந்த குற்றச்சாட்டுகளை உண்மை என்கிற விவதங்களை ஏற்படுத்தியது. கைது நடவடிக்கை தொடர்பாக உச்சநீதிமன்றத்தை அணுகியிருந்த கெஜ்ரிவாலுக்கு, தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள சில நாட்கள் மட்டும் ஜாமீன் வழங்கப்பட்டது. பிரசாரம் முடிந்த பின்னர் மீண்டும் கெஜ்ரிவால் சிறை சென்றார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பதியப்பட்ட வழக்கில், எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தேர்தல் நெருங்கும் நேரத்தில் கைது செய்திருப்பது, எதிர்க்கட்சிகளை முடக்கவே என்று ஜெக்ரிவால் தரப்பில் நீதிமன்றத்தில வாதிடப்பட்டது. கீழமை நீதிமன்றம், உயர்நீதிமன்றம் என கடைசியாக உச்சநீதிமன்றம் சென்று கெஜ்ரிவால் ஜாமீன் பெற்றார்.

ஜாமீன் பெற்று வெளியே வந்ததும், முதல் வேலையாக தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். தன்னை மக்கள் நேர்மையானவர் என்று கருதும் வரை இந்த பதவியில் தொடர மாட்டேன் என்றும் அவர் கூறியிருந்தார். இதனையடுத்து, அதிஷி புதிய முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்நிலையில், இன்று டெல்லி பேரவையில் அதிஷி பெரும்பான்மையை நிரூபிக்க இருக்கிறார். கடந்த 2020 சட்டமன்ற தேர்தலில், மொத்தமுள்ள 70 இடங்களில் ஆம் ஆத்மி 62 இடங்களை கைப்பற்றியது. இதனால் இன்று பெரும்பான்மையை நிரூபிப்பதில் எந்த சிக்கலும் இருக்காது. பெரும்பான்மையை நிரூபித்த பின்னர், குளிர் காலத்தில் ஏற்படும் காற்று மாசை தடுப்பது குறித்த செயல்திட்டம் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு குளிர்காலத்தின்போதும், டெல்லியில் காற்று மாசு புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதனை தடுக்கும் விதமாக 21 அம்சங்களை கொண்ட செயல்திட்டம் ஏற்கெனவே முன்மொழியப்பட்டிருக்கிறது. இன்று இது குறித்து விவாதிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரதமரின் சூரியசக்தி வீடு மின்சாரத் திட்டத்தின் கீழ் 48 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பயனடைந்துள்ளன

பிரதமரின் சூரியசக்தி வீடு மின்சாரத் திட்டத்தின் கீழ், உள்ளூர் மின்விநியோக நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட

அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான பாலமாக ஊடகங்கள் செயல்படுகின்றன: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு எம் சிவகுரு பிரபாகரன்

‘போதைப்பழக்கம் இல்லாத தமிழ்நாடு’ என்ற இலக்கை அடைய பொதுமக்களிடையே விழிப்புணர்வு அவசியம்: ராமநாதபுரம்

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் டெல்லி விரைவு நீதிமன்றத்தின் முதல் விசாரணைக்கே அரசுத் தரப்பில் யாரும் ஆஜராகாததால் நீதிபதி அதிருப்தி

📍 நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் டெல்லி விரைவு| நீதிமன்றத்தின் முதல் விசாரணைக்கே

சென்னை சேத்துப்பட்டில் செயல்பட்டு வரும் எம்.சி.சி. பப்ளிக் பள்ளி தனது 10ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு ஒரே நிகழ்வில் 56 உலகச் சாதனைகளை நிகழ்த்தி புதிய வரலாறு படைத்துள்ளது

131 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட எம்.சி.சி. அசோசியேஷனின் கீழ் இயங்கும் முன்னணி சிபிஎஸ்இ

டெல்லி சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு! பெரும்பான்மையை நிரூபிக்கிறார் அதிஷி!

பிரதமரின் சூரியசக்தி வீடு மின்சாரத் திட்டத்தின் கீழ் 48 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பயனடைந்துள்ளன

பிரதமரின் சூரியசக்தி வீடு மின்சாரத் திட்டத்தின் கீழ், உள்ளூர் மின்விநியோக நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட

அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான பாலமாக ஊடகங்கள் செயல்படுகின்றன: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு எம் சிவகுரு பிரபாகரன்

‘போதைப்பழக்கம் இல்லாத தமிழ்நாடு’ என்ற இலக்கை அடைய பொதுமக்களிடையே விழிப்புணர்வு அவசியம்: ராமநாதபுரம்

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் டெல்லி விரைவு நீதிமன்றத்தின் முதல் விசாரணைக்கே அரசுத் தரப்பில் யாரும் ஆஜராகாததால் நீதிபதி அதிருப்தி

📍 நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் டெல்லி விரைவு| நீதிமன்றத்தின் முதல் விசாரணைக்கே

சென்னை சேத்துப்பட்டில் செயல்பட்டு வரும் எம்.சி.சி. பப்ளிக் பள்ளி தனது 10ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு ஒரே நிகழ்வில் 56 உலகச் சாதனைகளை நிகழ்த்தி புதிய வரலாறு படைத்துள்ளது

131 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட எம்.சி.சி. அசோசியேஷனின் கீழ் இயங்கும் முன்னணி சிபிஎஸ்இ