டெல்லி செங்கோட்டையில் பிரதமர் தேசிய கொடி ஏற்றினார்

புதுடெல்லி:
இந்தியாவின் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியேற்றினார். பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றுவது இது 10-வது முறையாகும். தேசியக் கொடி ஏற்றிய பிறகு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர், அரசின் இலக்குகள் மற்றும் சாதனைகள் குறித்து விரிவாக பேசினார்.
தொடர்ந்து எதிர்க்கட்சிகளையும் பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார். பிரதமர் மோடி கூறுகையில், “எதிர்க்கட்சிகளின் அரசியல் கொள்கை என்பது முழுவதும் குடும்பத்திற்கானது மட்டுமே ஆகும். குடும்பத்தால் கட்சி, குடும்பத்திற்கான கட்சி என்பதே அவர்களின் கொள்கையாகும். ஊழலுக்கு எதிராக நான் தொடர்ந்து போராடுவேன், ஊழல்வாதிகளுக்கு எதிராக நான் கடும் நடவடிக்கை எடுப்பதால் எனக்கு எதிர்ப்பு அதிகமாக உள்ளது.
ஊழல், திருப்தி படுத்தும் அரசியல், வேண்டியவர்களுக்கு சலுகை வழங்குதல் போன்றவை மக்களின் நாட்டு மக்களின் லட்சியங்களை நசுக்குகிறது. சில அரசியல் கட்சிகள் தங்கள் குடும்ப நலனை மேம்படுத்தும் நோக்கத்துடன் மட்டுமே செயல்படுகின்றன” இவ்வாறு பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடி பேசினார்.

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

டெல்லி செங்கோட்டையில் பிரதமர் தேசிய கொடி ஏற்றினார்

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)